இந்தியா

ராம்சார் தளங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டை மிஞ்சத் தயாராகும் உத்தர பிரதேசம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: கடந்த 1971, பிப்​ர​வரி 2-ல் ஈரானின் ராம்​சார் நகரில் ஒரு சர்​வ​தேச மாநாடு நடை​பெற்​றது. உலகம் முழு​வதும் உள்ள ஈர நிலங்​களைப் பாது​காக்க நடத்​தப்​பட்ட இந்த மாநாட்​டில் சுமார் 170 நாடு​கள் பங்​கேற்று ஒப்​பந்​தம் கையெழுத்​திட்​டன. இது 1975, டிசம்​பர் 21-ல் நடை​முறைக்கு வந்​தது.

இந்த மாநாட்​டின்​படி, நீரோட்​டம் கொண்ட, பறவை​கள் மற்​றும் விலங்​கு​களுக்கு இயற்​கை​யான வாழ்​விடங்​களை வழங்​கு​கின்ற மற்​றும் பல்​லு​யிர் பெருக்​கத்​துக்​கான சாத்​தி​யக்​ கூறுகளை கொண்ட ஈர நிலங்​கள் ராம்​சார் பட்​டியலுக்கு தேர்வு செய்யப்படுகின்​றன. இந்​தி​யா​வின் ராம்​சார் தளங்​கள் பட்​டியலில் தமிழ்​நாடு 20 தளங்​களு​டன் முதலிடத்​தில் உள்​ளது. இதையடுத்து 12 தளங்​களு​டன் உ.பி. 2-ம் இடத்​தில் உள்​ளது.

இந்​நிலை​யில் ராம்​சார் தளங்​கள் எண்​ணிக்​கை​யில் தமிழ்​நாட்டை மிஞ்சி முதலிடம் பிடிப்​பதை உ.பி. நோக்​க​மாகக் கொண்டுள்​ளது. இதற்கு சாத்​தி​ய​மான ஈரநிலங்​களை கண்டறியும் ஒரு பிரச்​சா​ரத்தை முதல்​வர் யோகி ஆதித்​ய ​நாத் தொடங்கி வைத்​துள்​ளார்.

இந்த மாநிலத்​தின் பெரிய குளங்​களும் ஏரி​களும் உலகளா​விய அங்​கீ​காரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஈரநிலப் பாது​காப்​புப் போட்​டி​யில் தற்​போது ஒரு பெரிய உந்​துதலைப் பெற உ.பி. தயா​ராகி வரு​கிறது.

உ.பி.​யின் அலிகரில் உள்ள ஷேகா ஏரி சமீபத்​தில் ராம்​சார் பட்டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதையடுத்து உ.பி.​யின் பலி​யா​வில் உள்ள சுர்​ஹ​தால் பறவை​கள் சரணால​யம் விரை​வில் ராம்​சார் பட்டியலில் சேர்க்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேலும் பல மாவட்​டங்​களின் முன்​மொழி​வு​களும் ராம்​சார் பட்​டியலில் சேர்ப்​ப​தற்​காக தயார் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. உ.பி.​யின் புவியியல் அமைப்​பும், கங்​கை- ய​முனா தோவாப் பகு​தி​யில் உள்ள பரந்த ஈர நிலங்​களும் இத்​துறை​யில் மாநிலத்தை ஒரு முன்னோடி​யாக மாற்​றக்​கூடும் என்று நிபுணர்​கள் நம்​பு​கின்​றனர்.

தற்​போது, இந்​தி​யா​வில் 99 ராம்​சார் தளங்​கள் உள்​ளன. தமிழ்​நாடு, உ.பி.க்கு பிறகு பஞ்​சாப், ஒடிசா மற்​றும் பிஹாரில் தலா 6 ராம்​சார் தளங்​கள் உள்​ளன.

நான்​காவது இடத்​தில் தலா 5 தளங்​களு​டன் குஜ​ராத், ராஜஸ்​தான், ம.பி. மற்​றும் ஜம்மு காஷ்மீர் உள்​ளன. ராம்சார் தளம் பல்​லு​யிர் பாது​காப்பை வலுப்​படுத்​து​வதோடு வலசை செல்​லும் பறவை​களுக்கு பாது​காப்​பான வாழ்விடத்தையும் உறுதி செய்​கிறது.

SCROLL FOR NEXT