இந்தியா

அனைத்து குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை: வாழ்நாள் சிகிச்சை அளிக்க மத்திய அரசு திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதி​கரித்து வரு​கிறது. இதைக் கருத்​தில் கொண்டு மத்​திய அரசு தனது முதன்மை திட்​ட​மான ராஷ்ட்​ரிய பால் ஸ்வஸ்தய காரியக்​ரம் (ஆர்​பிஎஸ்​கே) திட்​டத்தை விரிவுபடுத்​துகிறது.

இதன்மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையி​லான அனைத்து குழந்தைகளுக்​கும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்​து, வாழ்நாள் முழு​வதும் இலவச சிகிச்சை வழங்க உள்​ளது. தேசிய பொது சுகா​தார மாநாட்​டில் மத்​திய சுகா​தார அமைச்​சகத்​தால் ஒரு வழி​காட்டு ஆவணம் வெளி​யிடப்​பட்​டது. இதில் குழந்​தைப் பருவ நீரிழிவு நோய்க்​கான பரிசோதனை, நோயறிதல், சிகிச்சை மற்​றும் நீண்​ட​கால மேலாண்மை ஆகிய​வற்​றுக்​காக ஒரு தேசிய கட்​டமைப்பு வகுக்​கப்​பட்​டுள்​ளது.

இது, சமூகம் மற்​றும் பள்ளி அளவி​லான பரிசோதனை​களை மாவட்ட அளவி​லான பராமரிப்​புடன் ஒருங்​கிணைத்​து, நோயை முன்​கூட்​டியே கண்​டறிவதை​யும் தொடர் சிகிச்​சையை உறுதி செய்​வதை​யும் நோக்​க​மாக கொண்​டுள்​ளது. இந்த திட்​டம், மத்​திய அரசின் மறுசீரமைக்​கப்​பட்ட ஆர்​பிஎஸ்கே 2.0 திட்​டத்​தின் ஒரு பகுதி​யாகும்.

இந்த வழி​காட்​டு​தல்​கள், மோச​மான உணவுப் பழக்​கம், குறைந்து வரும் உடல் ​சார்ந்த செயல்​பாடு​கள், அதிக திரைப் பயன்​பாடு உள்​ளிட்ட அதி​கரித்து வரும் வாழ்க்கை முறை அபா​யங்​களை​யும் சுட்​டிக்​ காட்​டு​ கின்​றன. மேலும், தொடர் சிகிச்​சையை வலுப்படுத்த, டிஜிட்​டல் முறையி​லான கண்​காணிப்பு கட்டமைக்கப்​பட்ட பின்​தொடர்​தல் முறை​களை​யும் அறி​முகப்​படுத்​துகின்​றன. இந்த திட்​டத்​தின் கீழ் நடமாடும் சுகா​தா​ரக் குழுக்கள், பள்​ளி​கள் மற்​றும் அங்​கன்​வாடி மையங்​களில் உள்ள குழந்​தைகளை பரிசோதனை செய்​யும்.

SCROLL FOR NEXT