இந்தியா

தர்மேந்திர பிரதானுக்கு வேறு இலாகா வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை மாற்​றத்​தில் பெண்​களுக்கு கூடு​தல் பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்​படும் எனத் தெரி​கிறது. இது​போல, கல்வி அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்த நிலை​யில், தர்மேந்திர பிரதானுக்கு வேறு இலாகா வழங்​கப்​படும் எனத் தெரிகிறது.

பிரதமர் நரேந்​திர மோடி, தனது அமைச்​சர​வையை பெரிய அளவில் மாற்றி அமைக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. குறிப்​பாக, இரு​பதுக்​கும் மேற்​பட்ட அமைச்​சர்​களின் இலா​காக்​களை மாற்ற திட்​ட​மிட்​டுள்​ளார். மேலும் சிலரை புதி​தாக அமைச்​சர​வை​யில் சேர்க்​க​வும் சிலரை அமைச்​சர் பதவியிலிருந்து விடு​வித்து கட்​சிப் பணிக்கு அனுப்​ப​வும் திட்டமிட்டுள்ளார்.

மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் பாஜக​வின் தேசி​யப் பொருளாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இருப்​பினும், அவர் தொடர்ந்து அமைச்​ச​ராக நீடிப்​பார் என்றே தெரி​கிறது. ஏனெனில், இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் பேச்​சு​வார்த்தை முக்​கிய​மான கட்​டத்​தில் உள்ள நிலை​யில் அவருடைய இலாகா மாற்​றப்​ப​டாது என்றே தெரி​கிறது.

நீட் தேர்வு விவ​காரத்​தைத் தொடர்ந்து தர்​மேந்​திர பிர​தான் கல்வி அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்​தார். அவர் வேறொரு துறைக்கு மத்​திய அமைச்​ச​ராக நியமிக்​கப்பட வாய்ப்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. நாடாளு​மன்​றத்​தில் கிரண் ரிஜிஜு​வின் அறைக்கு அரு​கிலேயே இவருக்​கும் ஒரு அறை ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. பொது​வாக இத்​தகைய அறை கேபினெட் அமைச்​சர்​களுக்கு மட்​டுமே ஒதுக்​கப்​படு​வது வழக்​கம்.

மேலும் மத்​திய அமைச்​சர​வை​யில் பெண்​களுக்கு அதிக பிர​தி​நி​தித்​து​வம் அளிப்​ப​தற்​கான முயற்​சிகளும் நடை​பெறுகின்​றன. அந்த வகை​யில் ராஜஸ்​தானைச் சேர்ந்த டாக்​டர் அல்கா குர்​ஜர் பெயர் பரிசீலிக்​கப்​படு​கிறது. பெண்​கள் பட்​டியலில் தமிழக பாஜக​வினருக்​கும் இணை அமைச்​சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்​ளது.

இது​போல, தென்​னிந்​தி​யா​வுக்​குப் போது​மான பிர​தி​நி​தித்​து​வம் இல்லை என்ற புகார் உள்​ளது. தற்​போது தென்​னிந்​தி​யா​வைச் சேர்ந்த சுமார் 10 பேர் அமைச்​சர்​களாக உள்​ளனர். இவர்​களில் மூவர் கேபினெட் அமைச்​சர்​கள், ஏழு பேர் இணை அமைச்​சர்​கள் ஆவர். எனவே, கூட்​ட​ணிக் கட்​சிகளின் கோரிக்​கைகளும் இந்த அமைச்​சரவை மாற்​றத்​தில் ஏற்​கப்பட உள்​ளது.

பிஹாரின் எல்​ஜேபி தலை​வரும் மத்​திய உணவு அமைச்​சரு​மான சிராக் பாஸ்​வான், தனக்கு அதிக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு அமைச்​சகத்​தைக் கோரு​கிறார். மகா​ராஷ்டி​ரா​வில், 13 மக்​களவை உறுப்​பினர்​களைக் கொண்​டுள்ள ஏக்​நாத் ஷிண்டே தரப்​பும், அமைச்​சர​வை​யில் கூடு​தலாக ஒரு இடம் கோரி வரு​கிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி, மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​ன​விஸுடன் ஆலோ​சனை செய்​திருந்​தார். சிவசேனா மற்​றும் என்​சிபி ஆகிய கட்​சிகளின் இரு பிரிவு​கள் தொடர்​பான விவ​காரங்​களுக்கு விரை​வான தீர்வு காண்​ப​தற்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதன் பின்​னணி​யில் அவர்​களுக்​கும் அமைச்​சர​வை​யில் இடமளிக்க முடிவு செய்திருப்பதே காரணம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT