இந்தியா

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் மத்​திய பட்ஜெட் இன்று தாக்​கல் செய்யப்​படு​கிறது. இதில் பல்​வேறு முக்​கிய அறி​விப்​பு​கள் வெளி​யாகலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடர் கடந்த 28-ம் தேதி குடியரசுத் தலை​வர் உரையுடன் தொடங்கியது. 29-ம் தேதி பொருளா​தார ஆய்​வறிக்​கையை மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தாக்​கல் செய்​தார். இந்​நிலை​யில், மக்​களவை​யில் மத்​திய பட்​ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்​கல் செய்​கிறார். தொடர்ந்து 9-வது முறை​யாக பட்​ஜெட்டை அவர் தாக்​கல் செய்கிறார்.

          

கடந்த முறை பட்​ஜெட்​டில் தனி​நபர் வரு​மான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டது. நிலைக்​கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதி​கரிக்​கப்​பட்​டது. இதன்​படி, ஓராண்டு வரு​மானம் ரூ.12.75 லட்​சம் வரை இருந்​தால் வரு​மான வரி செலுத்த தேவை​யில்​லை. இன்​றைய பட்​ஜெட்​டில் நிலைக்​கழிவு ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்​ச​மாக அதி​கரிக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

குறு, சிறு விவ​சா​யிகளுக்கான ஆண்டு நிதி​யுதவி ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக அதிகரிக்​கப்பட வாய்ப்பு இருக்​கிறது. மத்​திய அரசின் ‘பிஎம் சூர்ய கர்’ மானி​யத் திட்​டத்​தின்​ கீழ் வீடுகளில் சோலார் பேனல் அமைப்​ப​தற்​கான மானிய உதவி, மத்​திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்​து​வக் காப்​பீடு வரம்பு ஆகியவை​யும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்​ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிப்பதால், அவற்றின் மீதான சுங்க வரி குறைக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

2017 முதல் மத்​திய பட்​ஜெட்​டுடன் இணைத்தே ரயில்வே பட்​ஜெட்​டும் தாக்​கல் செய்​யப்​படு​கிறது. அந்த வகை​யில், அம்ரித் பாரத், வந்தே பாரத் உட்பட 300-க்​கும் மேற்​பட்ட புதிய ரயில்​கள் குறித்த அறி​விப்​பும்​ வெளியாகும்​ என்று எதிர்​பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT