உமர் நபி, புர்கான் வானி

 
இந்தியா

புர்கான் வானி கொலைக்கு உமர் நபி பழிவாங்க விரும்பினார்: என்ஐஏ விசாரணையில் புதிய தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே் கடந்த 10-ம் தேதி காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி வெடிபொருள் நிரப்​பிய காரை வெடிக்​கச் செய்து தற்​கொலை தாக்​குதல் நடத்​தி​னார்.

இதுகுறித்து, இந்த வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதி​காரி​கள் வட்​டாரம் கூறிய​தாவது: உமர் நபிக்கு 9 மொழிகள் தெரி​யும். தீவிர​வாத குழு​வில் மிக​வும் படித்த மற்​றும் புத்​தி​சாலி நபராக அவர் இருந்​தார். கைதாகி உள்ள முஜம்​மில் ஷகீல் தனது வாக்​குமூலத்​தில், “உமர் நபி எப்​போதும் உண்​மை​, ஆய்​வுத் தகவல் அடிப்​படை​யில்​தான் பேசு​வார். அதி​கம் பேச​மாட்​டார். அவர் எப்​போதும் அமீர் (இளவரசன்) என்றே தன்னை அழைத்​துக் கொண்​டார்.

இந்​தி​யா​வில் முஸ்​லிம்​கள் மோச​மான சூழலில் இருப்​ப​தாக அவர் கூறிவந்​தார். காஷ்மீரில் கடந்த 2016-ல் பாது​காப்பு படை​யின​ரால் ஹிஸ்​புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி கொல்​லப்​பட்​டதற்கு அவர் பழி​வாங்க விரும்​பி​னார்.

மேலும் ஜம்மு காஷ்மீருக்​கான சிறப்பு அந்​தஸ்து ரத்​து, 2023 ஜூலை​யில் ஹரி​யா​னா​வின் மேவாட்​-நூ பகு​தி​யில் நடந்த வன்​முறை, 2023 மார்ச்​சில் பசு பாது​காவலர்​களால் இரு​வர் கொல்​லப்​பட்​டது உள்​ளிட்ட நிகழ்​வு​களும் அவரை விரக்தி அடையச் செய்​தன” என்று கூறி​யுள்​ளார். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

SCROLL FOR NEXT