மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
எம்பிக்களும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, கட்சிகளை உடைக்க ‘ஆபரேஷன்' என்கின்றனர். பாஜக தற்போது நடத்துவது ‘ஆபரேஷன் ராம் மந்திர்' தானா? ராமர் கோயிலில் நிதித் திருட்டு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. அங்கிருந்து திருடப்பட்ட பணம் தான் அரசியல் கட்சிகளை உடைக்கப் பயன்படுத்தப்படுவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
கோயில்களில் கொள்ளையடிப்பவர்களை இந்துக்கள் இனி ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.