ஆயுர்வேத மசாஜ் மையத்தில் தாதா கும்பல் தாக்குதல் நடத்திய காட்சி.
திருவல்லா: கேரளாவின் திருவல்லா பகுதியில் ரூ.50,000 மாமூல் தர மறுத்ததால், ஆயுர்வேத மசாஜ் மைய பெண் ஊழியரை 6 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் ஆயுர்வேத மசாஜ் மையம் நடத்தும் உரிமையாளரிடம் அப்பகுதியைச் சேர்த்த தாதா கும்பல் கடந்த 1ம் தேதி ரூ.50,000 மாமூல் கேட்டுள்ளது. ஆனால், ரூ.10,000 மட்டும் மசாஜ் மைய உரிமையாளர் வழங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த தாதா கும்பல், ஆயுர்வேத மசாஜ் மைய ஊழியர் மற்றும் பெண் வாடிக்கையாளர் ஒருவரை தாக்கியது.
பின்னர் வரவேற்பு அறையில் இருந்த பெண் ஊழியரை தனியறைக்கு இழுத்து சென்று 6 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதை அந்த கும்பல் வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளது. பட்டப் பகலில் நடைபெற்ற இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண், திருவல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் சுபின் அலெக்சாண்டர் சா்கோ (29), பெர்லின் தாஸ் (38) ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சுபின் அலெக்சாண்டர் ஏற்கெனவே பல குற்றங்களில் ஈடுபட்டவர் என தெரிந்தது.