மத்​திய அமைச்​சர் அமித் ஷா

 
இந்தியா

‘ஊடுருவல்காரர்களுக்கு புகலிடம் தரும் திரிணமூல் அரசு’ - அமித் ஷா பேச்சு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில் விரை​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், வடக்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டம் பாரக்​பூரில் நடை​பெற்ற பாஜக தொண்​டர்​கள் கூட்​டத்​தில் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது:

மேற்கு வங்​கத்​தில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு, வங்​கதேச ஊடுரு​வல்​காரர்​களுக்கு புகலிடம் தரு​கிறது. ஊடுரு​வல் நடக்​கும் விதம், ஒட்​டுமொத்த நாட்​டுக்கே பாது​காப்​புப் பிரச்​சினை​யாக மாறி​யுள்​ளது. நீதி​மன்ற உத்​தர​வுக்​குப் பிறகும், எல்லை வேலி அமைப்​ப​தற்​காக பிஎஸ்​எப் படைகளுக்கு திரிண​மூல் அரசு நிலம் வழங்க மறுக்​கிறது. ஊடுரு​வல்​காரர்​களை அவர்​கள் தங்​கள் வாக்கு வங்​கி​யாகக் கருது​வது​தான் இதற்​குக் காரணம்.

          

மாநில காவல் துறை​ சட்​ட​விரோதக் குடியேறிகளைத் தடுப்​ப​தில்​லை. அவர்​கள் போலி ஆவணங்​கள் மூலம் நாடு முழு​வதும் அனுப்​பப்​படு​கின்​றனர். திரிண​மூல் ஆட்​சியை வேரோடு பிடுங்கி எறிந்​து​விட்​டு, தேசபக்​தர்​கள் மற்​றும் தேசி​ய​வா​தி​களின் அரசை நிறுவ வேண்​டும். மேற்கு வங்​கத்​தில் பாஜக அரசு அமைவது அந்த மாநிலத்​துக்கு மட்​டுமல்ல, நாட்​டின் பாது​காப்​புக்​கும் மிக​வும் முக்​கிய​மானது. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT