இந்தியா

மேற்கு வங்கத்தில் வயல்வெளியில் ஓடஓட விரட்டி பாஜக வேட்பாளர் மீது திரிணமூல் கட்சியினர் தாக்குதல்

செய்திப்பிரிவு

குமார்கஞ்ச்: மேற்​கு​வங்​கத்​தில் குமார்​கஞ்ச் தொகுதி பாஜக வேட்​பாளரை, திரிணமூல் காங்​கிரஸ் தொண்​டர்கள் ஓட, ஓட விரட்​டிச் சென்று தாக்​கிய சம்​பவம் சமூக ஊடகத்தில் வேக​மாக பரவியது.

மேற்கு வங்​கத்​தில் நேற்று முதல் கட்ட சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. குமார்​கஞ்ச் தொகு​தி​யின் பாஜக வேட்​பாளர் சுவேந்து சர்க்​காரை, திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​கள் வயல்​வெளி​யில் விரட்​டிச் சென்று தாக்​கும் காட்​சி​யும், அவருக்கு பாது​காப்​பாகச் சென்ற போலீஸ்​காரரும் சுவேந்து சர்க்​கார் பின்​னால் ஓடும் வீடியோ சமூக ஊடகங்​களில் வைரலாக பரவியது.

இச்​சம்​பவம் குறித்து அறிக்கை தாக்​கல் செய்​யும்​படி மாவட்ட அதி​காரி​களிடம் தேர்​தல் ஆணை​யம் கூறியுள்ளது. இந்த வன்​முறை குறித்து சுவேந்து சர்க்​கார் கூறிய​தாவது: எனது தொகு​தி​யில் உள்ள 24-ம் எண் வாக்குச் சாவடிக்​குச் சென்றபோது, என்​னுடன் வந்​தவர்​கள் மீது ஒரு கும்​பல் தாக்​குதல் நடத்​தி​யது.

தேர்​தல் தோல்வி பயம் காரண​மாகத் திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யினர் தாக்​குதல் நடத்​தினர். இந்த தாக்குதலில் நான் காயம் அடைந்​தேன். எனது வாக​னம் அடித்து நொறுக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார். இச்சம்​பவம் குறித்து நடவ டிக்கை எடுக்​கப்​படும் என அதிகாரி​கள் கூறி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT