இந்தியா

மேற்கு வங்கத்தில் திரிணமூல் தோல்வி: 15 ஆண்டுக்குப்பின் தலைமுடியை மழித்து சபதத்தை நிறைவேற்றிய பாஜக ஆதரவாளர்

செய்திப்பிரிவு

கூச் பெஹார்: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்​டத்​தின் பாமன் பாரா கிராமத்​தைச் சேர்ந்​தவர் பனேஷ்வர் பர்​மன். செங்​கல் சூளை​யில் பணி​யாற்​றும் புலம் பெயர்ந்த தொழிலா​ளி​யான இவர், தீவிர பாஜக ஆதர​வாளர்.

கடந்த 2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் முதன் முதலில் ஆட்​சி​யைப் பிடித்த போது, அந்த ஆட்சி அகலும் வரை தனது தலை​முடியை வெட்​டப் போவ​தில்லை என இவர் உறுதி பூண்​டார்.

சுமார் 14 ஆண்​டு​களுக்​கும் மேலாக தனது தலை​முடியை வெட்​டா​மல் இருந்த பர்​மன், கடந்த வியாழக்​கிழமை அக்​கம் பக்​கத்​தினர் முன்​னிலை​யில் தலையை மொட்டை அடித்து சபதத்தை முடித்​துக் கொண்​டார்.

இதுகுறித்து பனேஷ்வர் பர்மன் கூறிய​தாவது: திரிண​மூல் ஆட்​சிக்கு வந்​த​தில் இருந்து நான் முடி திருத்​தும் நிலை​யத்​தின் பக்​கமே செல்​ல​வில்​லை. மே 4-ம் தேதி தேர்​தல் முடிவு​கள் வெளி​யான போது, அதி​காலை முதலே தொலைக்​காட்​சியே கதி என இருந்​தேன். பாஜக 100 இடங்​களைத் தாண்​டிய போது எனக்கு ஏற்​பட்ட மகிழ்ச்​சிக்கு அளவே இல்​லை. இப்​போது புதிய ஆட்சி வந்​து​விட்​டது, இனி வளரும் முடியை எப்​போது வேண்​டு​மா​னாலும் வெட்​டிக் கொள்​வேன்.

கடந்த 15 ஆண்​டு​களில் எங்​கள் பகுதி​யில் எவ்​வித முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்​லை. எனது மகன் மற்​றும் இரு மகள்​கள் என எனது குடும்​பம் பெரும் பொருளா​தார நெருக்​கடியைச் சந்​தித்​தது. இந்த நிலை மாற வேண்​டும் என்​ப​தற்​காகவே அரசி​யல் மாற்​றத்தை விரும்​பினேன். இவ்​வாறு பர்​மன் கூறி​னார்.

பர்​மன் தனது சபதத்தை முடித்​துக் கொண்ட செய்தி காட்​டுத் தீயாகப் பரவியதை அடுத்​து, கிராம மக்​கள் அவர் வீட்​டின் முன் திரண்​டனர். அவரது மொட்டை அடிக்​கும் வைபவத்​துக்​குப் பிறகு, குடும்​பத்​தினர் மற்​றும் ஊர் மக்​கள் அனை​வருக்​கும்​ 'பொரி' வழங்​கி உற்​சாக​மாகக்​ கொண்​டாடினர்​.

SCROLL FOR NEXT