இந்தியா

ஏழுமலையான் கோயில் நிர்வாகம் எப்படி? - பக்தர்களிடம் கருத்து கேட்கும் திருப்பதி தேவஸ்தானம்

என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.

ஆந்​திர மாநிலத்​தில் உள்ள அனைத்து முக்​கிய கோயில்​களி​லும் பக்​தர்​களுக்கு வேண்​டிய வசதி​கள் உள்​ளனவா என்​பது குறித்து கோயில் நிர்​வாகத்​தினர் பக்​தர்​களிடையே கருத்​துகளை கேட்டு வரு​கின்​றனர்.

இதன் அடிப்​படை​யில் நிறை, குறை​களை ஆராய்ந்து சரி செய்ய வேண்​டுமென முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உத்​தர​விட்​டுள்​ளார்.

இந்நிலை​யில், நேற்று முதல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் ஸ்ரீவாரி சேவகர்​கள் மூலம் திரு​மலைக்கு வரும் பக்​தர்​களிடம் நேரடி​யாக கேள்வி​களை கேட்டு கருத்​துக்​களை சேகரித்து வரு​கின்​றனர்.

தரிசனம், ஆர்​ஜித சேவை​கள், கல்​யாண கட்​டா, அன்​ன​தானம், பிர​சாதம், தங்​கும் விடு​தி​கள், போக்​கு​வரத்​து, தேவஸ்​தான ஊழியர்​கள் நடந்து கொள்​ளும் முறை, லக்​கேஜ் மைய வசதி, தனி​யார் ஓட்​டல்களில் உள்ள விலைப்​பட்​டியல் போன்​றவை குறித்து மொத்தம் 17 கேள்வி​கள் பக்​தர்களிடம் கேட்​​கப்​படு​கின்​றன.

SCROLL FOR NEXT