இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவம் 4-ம் நாள் விழா: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பர் பவனி

என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவத்​தின் 4-ம் நாள் விழா வெகு சிறப்​பாக நடை​பெற்​றது. நேற்று காலை திருமலையில் உள்ள வாகன மண்​டபத்​தில் இருந்து உற்​சவ​ரான மலை​யப்​பர் கற்பக விருட்ச வாக​னத்​தில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார். ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராக கிருஷ்ண அலங்​காரத்​தில் மலை​யப்​பர் பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தார்.

4 மாட வீதி​களில் ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, கர்​நாட​கா, தெலங்​கா​னா, உத்​த​ராகண்ட் மற்​றும் ஆந்​திரப் பிரதேச மாநிலங்​களைச் சேர்ந்த 21 பிரிவு​களைச் சார்ந்த 551 நடனக் கலைஞர்​களின் கலைநிகழ்ச்​சிகள் பக்​தர்​களை​யும் தேவஸ்​தான அதிகாரிகளையும் வெகு​வாகக் கவர்ந்​தன.

இதனைத் தொடர்ந்​து, இரவில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராக மலையப்​பர் சர்வ பூபாள வாக​னத்​தில் எழுந்​தருளி​னார். பிரம்​மோற்சவ வாகன சேவை​களி​லேயே அதிக எடை கொண்​டது சர்வ பூபாள வாக​ன​மாகும். இரவில் நடந்த இந்த வாகன சேவை​யில் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர். இன்று கருட சேவை திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவத்​தின் 5-ம் நாளான இன்​றிர​வு கருட சேவை நடை​பெற உள்ளது.

SCROLL FOR NEXT