கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் பிஎம்டி ரக ஏவுகணைகள், போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. படங்கள்: பிடிஐ

 
இந்தியா

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் நடந்த 3 இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்

செய்திப்பிரிவு

சந்திப்பூர்: கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களை, நடு​வானில் இடைமறித்து அழிக்​கும் பிஎம்டி ரக ஏவு​கணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை​கள் ஒடிசா மாநிலம் சந்​திப்​பூரில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​டுள்​ளன.

அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, பிரான்​ஸ், இந்​தி​யா, பிரிட்​டன், வடகொரி​யா, இஸ்​ரேல் ஆகிய நாடு​களிடம் மட்​டுமே கண்​டம் விட்டு கண்​டம் பாயும் பாலிஸ்​டிக் ஏவு​கணை​கள் (ஐசிபிஎம்) உள்​ளன. இந்த வகை ஏவு​கணை​கள், பூமி​யின் வளிமண்​டலத்​தைத் தாண்டி வெளியே செல்​லும். பின்​னர் வளிமண்​டலத்​தில் இருந்து பூமிக்​குள் அதிவேக​மாக மீண்​டும் நுழைந்து நிர்​ண​யிக்​கப்​பட்ட இலக்​கு​களை துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும்.

இது​போன்ற கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிப்​பது மிக​வும் கடினம். அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, இஸ்​ரேல் நாடு​களிடம் மட்​டுமே ஐசிபிஎம் ஏவு​கணை​களை இடைமறித்து அழிக்​கும் தடுப்பு ஏவு​கணை​கள் உள்​ளன. அந்த வரிசை​யில் இப்​போது இந்​தி​யா​வும் இணைந்​திருக்​கிறது.

மத்​திய அரசின் பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு நிறு​வனம் (டிஆர்​டிஓ) கடந்த 10, 11-ம் தேதி​களில் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்​கும் பிஎம்டி ஏவு​கணை, போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் என்ஏஎஸ்எம்- எம்ஆர் ரக ஏவுகணை சோதனை​களை வெற்​றிகர​மாக நடத்தி உள்​ளது. ஒடிசா மாநிலம் சந்​திப்​பூர் ஏவுதளத்​தில் இருந்து நடத்​தப்​பட்ட இந்த 3 சோதனை​களும் முழு வெற்றி அடைந்​துள்​ளன. இவற்​றில் ஒரு ஏவு​கணை பூமிக்கு வெளி​யிலேயே இடைமறித்து தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது. மற்​றொன்று பூமிக்​குள் வந்த பிறகு இடைமறித்து தாக்கி அழிக்​கும். மூன்​றாவது போர்க் கப்​பல்​களை இடைமறித்து அழிக்​கும் வல்​லமை படைத்​தது.

இதுகுறித்து மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ‘‘உலகில் சில நாடு​களிடம் மட்​டுமே ஐசிபிஎம் ஏவு​கணை​களை அழிக்​கும் திறன் இருக்​கிறது. இந்​தப் பட்​டியலில் இந்​தி​யா​வும் இணைந்​திருக்​கிறது. புதிய சாதனையைப் படைத்த டிஆர்​டிஓ விஞ்​ஞானிகளைப் பாராட்​டு​கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்​பாக இந்​தி​யப் பாது​காப்​புத் துறை நிபுணர்​கள் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் பாது​காப்​புக்​குச் சீனா​வும் பாகிஸ்​தானும் அச்​சுறுத்​தலாக உள்​ளன. இரு நாடு​களிட​மும் அணு ஆயுதங்​கள் உள்​ளன. பொது​வாக கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​கள் (ஐசிபிஎம்) மூலம் அணு ஆயுதத் தாக்​குதல்​களை நடத்​தும் அபா​யம் உள்​ளது.

இதை கருத்​தில் கொண்டு ஐசிபிஎம் ஏவு​கணை​களை இடைமறித்து அழிக்​கும் பிஎம்டி ஏவு​கணை திட்​டத்​தைக் கடந்த 1999-ம் ஆண்​டில் டிஆர்​டிஓ தொடங்​கியது. பல்​வேறு கட்​டங்​களாகத் தொடர்ந்து சோதனை​கள் நடத்​தப்​பட்டு வந்​தன. இந்​தத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாகக் கடந்த 2000-ம் ஆண்​டில் இஸ்​ரேலிடம் இருந்து ஸ்வார்​டு​பிஷ் என்ற அதிநவீன ரேடார் வாங்​கப்​பட்​டது.

இஸ்​ரேல் அனு​ம​தி​யுடன் இந்த ரேடார்​கள் உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​படு​கின்​றன. இதன்​மூலம் 1,500 முதல் 5,000 கி.மீ. தொலைவு வரையி​லான எதிரி​களின் ஏவு​கணை​களைத் துல்​லிய​மாகக் கண்​டு​பிடிக்க முடி​யும். குறிப்​பாக ஒரே நேரத்​தில் 200 ஏவு​கணை​களைத் தொடர்ந்து கண்​காணிக்க முடி​யும்.

பல ஆண்​டு​கள் நடத்​திய ஆராய்ச்​சி​யின் பலனாக டிஆர்​டிஓ சார்​பில் ஏடி1, ஏடி2 ஆகிய பெயர்​களில் பிஎம்டி தடுப்பு ஏவு​கணை​கள் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன. ஸ்வார்​டு​பிஷ் ரேடார் மற்​றும் பிஎம்டி ஏவு​கணை​கள் மூலம் எதிரி​களின் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்க முடி​யும். தற்​போது நடத்​தப்​பட்டு உள்ள சோதனை​கள் மூலம் 5,000 கி.மீ. தொலை​வில் இருக்​கும் ஐசிபிஎம் ஏவு​கணை​களை அழிக்​கும் திறனை இந்​தியா பெற்​றிருக்​கிறது.

4 அடுக்கு வான் பாது​காப்பு: எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​ தாக்​குதலை முறியடிக்க விமானப் படை சார்​பில் 4 அடுக்கு வான் பாது​காப்​புக் கவசம் அமைக்​கப்​படு​கிறது. முதல்​கட்ட வான் பாது​காப்​பில், எதிரி​களின் ட்ரோன்​களை அழிக்க இஸ்​ரேல் தயாரிப்​பான பைதன், டெர்பி ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​படும்.

இரண்​டாவது அடுக்​கில் எதிரி​களின் குறுகிய தொலைவு ஏவு​கணை​களை இடைமறித்து அழிக்க பராக்-8 ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​படும். மூன்​றாவது அடுக்​கில் எதிரி​களின் நடுத்தர தொலைவு ஏவு​கணை​களை நடு​வானில் அழிக்க ரஷ்​யா​வின் எஸ்​-400 ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​படும். நான்​காவது அடுக்​கில் எதிரி​களின் கண்​டம் விட்டு கண்​டம் பா​யும் ஏவு​கணை​களை அழிக்க பிஎம்டி ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்தப்​படும். இந்த வகை ஏவு​கணை​கள் மூலம் பூமி​யின் வளிமண்​டலத்​துக்கு வெளியே எதிரி​களின்​ ஏவு​கணை​கள்​ தகர்க்​கப்​படும்​. இவ்​வாறு நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

ஊக்கத்தொகை, உணவு வழங்கி 11 கிராம மக்கள் வெளியேற்றம்

இந்த சோதனைகள் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம், சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சந்திப்பூர் தளத்தில் அக்னி, பிருத்வி, பிரம்மோஸ் ரகங்களைச் சேர்ந்த ஏவுகணைகளைச் சோதனை செய்யும் போது சுற்று வட்டார கிராம மக்கள் வெளியேற்றப்படுவது வழக்கம்.

இதேபோல டிஆர்டிஓவின் பிஎம்டி ரக ஏவுகணை சோதனைகளுக்காகச் சில நாட்களுக்கு முன்பு சந்திப்பூர் சுற்றுவட்டாரத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தங்குமிடம், குடிநீர், உணவுகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT