பெங்களூர்: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக 4-வது ஆண்டாக இன்று பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
இதை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பிற்பகலில் தொடங்கி வைக்கிறார். சிவாஜி நகர் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினீயர்ஸ் வளாகத்தில் இன்று தொடங்கி 15-ம் தேதி வரை 10 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு தினமும் மாலையில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.