இந்தியா

நட்சத்திர ஓட்டல்களில் ‘கள்’ விற்பனை செய்ய திட்டம்: தெலங்கானா அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல்​களில் ‘கள்’ விற்க நடவடிக்கை எடுப்​போம் என தெலங்​கானா மாநில அமைச்​சர் பொன்​னம் பிர​பாகர் அறி​வித்​துள்​ளார்.

தெலங்​கானா மாநில போக்​கு​வரத்து மற்​றும் பிசி நலச்​சங்க துறை அமைச்​சர் பொன்​னம் பிர​பாகர் ஹைத​ரா​பாத்​தில் நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: தெலங்​கானா கலாச்​சா​ரத்தை வெளி உலகிற்கு தெரியப்​படுத்​தும் வகை​யில், இனி ‘கள்’, நீரா (பதநீர்) போன்​றவற்​றின் விற்​பனை ஊக்​குவிக்​கப்​படும். இதற்​கான தீவிர முயற்​சி​யில் அரசு உள்​ளது. தோட்டக்கலை பண்ணைகளில் கூட ஈச்​சம், பனை கன்​றுகள் இலவச​மாக வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும்.

ஹைத​ரா​பாத்​தில் உள்ள 5 நட்​சத்​திர ஓட்​டல்​களில் கூட ‘கள்’, நீரா போன்​றவை விற்க நடவடிக்கை எடுக்​கப்​படும். கள் இறக்​கும் கூலி தொழிலா​ளர்​கள் நலனுக்​காக இந்த அரசு பல திட்​டங்​களை செயல்​படுத்​தும். வரும் 24-ம் தேதி எக்​ஸ்​பீரி​யம் பார்க்​கில் ‘பனை மேளா’ நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அங்கு 250 வகையி​லான பனை மரங்​கள் நடப்​பட்​டுள்​ளன. அவை​களை மக்​கள் கண்டு ரசிக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT