இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்​ய​காந்த்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றத்​தின் 53-ஆவது தலைமை நீதிப​தி​யாக சூர்​ய​காந்த் நேற்று காலை பதவி​யேற்​றுக் கொண்​டார்.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக இருந்த பி.ஆர்​.க​வாய் நேற்று முன்​தினம் மாலை​யுடன் ஓய்​வு​பெற்​றார். இந்​நிலை​யில் நேற்று காலை குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நடை​பெற்ற விழா​வில் உச்ச நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் பதவி​யேற்​றுக் கொண்​டார். அவருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்வு பதவி​யேற்பு பிர​மாண​மும், ரகசி​யக் காப்​புப் பிர​மாண​மும் செய்து வைத்​தார்.

6 நாடு​களைச் சேர்ந்த நீதிப​தி​கள்: அரசி​யலமைப்பை காப்​பேன் என்​றும், கடமை​களை உண்​மை​யாக நிறைவேற்​று​வேன் என்​றும் இந்​தி​யில் கூறி சூர்​ய​காந்த் பதவி​யேற்​றார். இதையடுத்​து, குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு அவருக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​தார். இந்த நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி, மத்​திய அமைச்​சர், டெல்லி துணைநிலை ஆளுநர், டெல்லி முதல்​வர் ரேகா குப்தா ஆகியோர் பங்​கேற்​றனர். மேலும் மலேசி​யா, இலங்கை உள்​ளிட்ட 6 நாடு​களைச் சேர்ந்த நீதிப​தி​கள் பங்​கேற்​றனர்.

தலைமை நீதிப​தி​யாக பதவி​யேற்​றுள்ள சூர்ய காந்த், அடுத்த 15 மாதங்​கள் அந்​தப் பதவி​யில் நீடிப்​பார். 2027-ம் ஆண்​டு, பிப்​ர​வரி 9-ம் தேதி தனது 65 வயது நிறைவடை​யும்​போது அவர் ஓய்​வு​பெறவுள்​ளார்.

ஜம்​மு-​காஷ்மீருக்​குச் சிறப்பு அந்​தஸ்து வழங்​கிய அரசமைப்​புச் சட்​டப்​பிரிவு 370 நீக்​கம், பிஹார் வாக்​காளர் பட்​டியல் திருத்​தம், பெகாசஸ் உளவு மென்​பொருள் வழக்கு உள்​ளிட்ட பல முக்​கி​யத் தீர்ப்​பு​களை வழங்​கிய அமர்​வு​களில் நீதிபதி சூர்​ய​காந்த் இடம்​பெற்​றிருந்​தார்.

ஹரி​யா​னா​வின் ஹிசார் மாவட்​டத்​தில் ஒரு நடுத்​தரக் குடும்​பத்​தில் கடந்த 1962-ம் ஆண்​டு, பிப்​ர​வரி 10-ம் தேதி பிறந்த நீதிபதி சூர்ய காந்த், ஒரு சிறு நகரத்​தில் வழக்​கறிஞ​ராக இருந்து நாட்​டின் உயரிய நீதித்​துறைப் பதவியை எட்​டி​யுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

முன்​ன​தாக, பஞ்​சாப் மற்​றும் ஹரி​யானா உயர்​ நீ​தி​மன்​றத்​தில் முதலில் பணி​யாற்​றிய நீதிபதி சூர்​ய​காந்த், இமாச்சல பிரதேச உயர் நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிப​தி​யாக 2018, அக்​டோபரில் நியமிக்​கப்​பட்​டார். தொடர்ந்​து, உச்ச நீதி​மன்ற நீதிப​தி​யாக 2019, மே மாதம் பதவி​யேற்​றார்.

நினைத்துப் பார்த்ததில்லை... உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சூர்யகாந்த் தனது சொந்த கிராமத்திலுள்ள வீட்டில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தின் பெட்வார் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். 6 அடி அகலம், 8 அடி நீளமுள்ள இந்த அறைதான் என்னுடைய படிப்பறை. இதில் என்னுடைய நண்பர்கள் 3 பேருடன் படித்தேன். எங்களுடைய ஆங்கில ஆசிரியர் பிரேம் சிங்கை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இரவு நேரங்களில் வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்து படிக்குமாறு கூறினார். இதையடுத்து இரவு நேர உணவை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று பாடங்களை பயில்வோம்.

எங்கள் கிராமத்தில் சரியான மின்சார வசதி கிடையாது. அப்படியே மின்சாரம் வந்தாலும் குறைந்த அழுத்த மின்சாரமே கிடைக்கும். இதன்மூலம் கிடைக்கும் வெளிச்சம் போதுமானதாக இருக்காது. இதையடுத்து விளக்கின் துணை மூலம் படிப்போம்.

சிறுவயதில் நீதித்துறை அல்லது நீதிபதி என்றாலே என்னவென்று தெரியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் ஒரு நாள் அமர்வேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.

பள்ளிப்படிப்பை முடித்ததும் உயர்கல்வியாக எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தது. என்னுடைய சகோதரர்கள் பல்வேறு யோசனைகளைக் கூறினர். பலரிடம் ஆலோசனை செய்த பின்னர் சட்டம் படிக்க முடிவு செய்தேன். நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு எனது பெற்றோர், ஆசிரியர்கள், ஊர் பெரியவர்களின் ஆசிதான் காரணம். எனது பதவிக் காலத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களுக்கு முன்​னுரிமை கொடுப்​பேன். நாடு முழு​வதும் பல்​வேறு நீதி​மன்​றங்​களில் ஏராள​மான வழக்​கு​கள் தேங்கி உள்​ளன. இந்த எண்​ணிக்​கையை குறைக்க நடவடிக்கை எடுப்​பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT