இந்தியா

உன்னாவ் பாலியல் குற்றவாளி குல்தீப் சிங்கின் ஜாமினை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2017-ல் உத்தர பிரதேச மாநிலம் உன்​னா​வில் வேலை கேட்​டுச் சென்ற பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் பாஜக எம்​எல்​ஏ​வாக இருந்த குல்​தீப் சிங் செங்​கருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

இந்த வழக்​கில் ஜாமீன் வழங்​கி​யும் விதிக்​கப்​பட்ட ஆயுள் தண்​டனையை நிறுத்தி வைத்​தும் டெல்லி உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான அமர்வு நேற்று விசா​ரித்​தது.

சிபிஐ சார்​பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜாமீனை​யும் நிறுத்தி வைக்​கப்​பட்ட ஆயுள் தண்​டனை உத்​தர​வை​யும் ரத்து செய்ய வேண்​டும் என வாதிட்​டார். இதற்கு குல்​தீப் சிங் செங்​கர் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் சித்​தார்த் தவே, என். ஹரி​கரன் ஆட்​சேபம் தெரி​வித்​தனர்.

இருதரப்பு வாதத்​தைக் கேட்ட நீதிப​தி​கள், ‘‘இந்த விவ​காரம் குறித்து விரி​வாக விசா​ரணை நடத்த வேண்​டி​யுள்​ளது. எனவே, குல்​தீப் சிங் செங்​கரின் ஜாமினை​யும், ஆயுள் தண்​டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதி​மன்ற உத்​தர​வை​யும் ரத்து செய்​கிறோம். மேலும் இந்த மனு தொடர்​பாக குல்​தீப் சிங் செங்​கர் பதில் அளிக்க வேண்​டும்​’’ என்​று உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT