செந்தில் பாலாஜி | கோப்புப்படம் 
இந்தியா

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜிக்கு விதித்த ஜாமீன் நிபந்​தனைகளை உச்ச நீதி​மன்​றம் தளர்த்தி உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழ்​நாடு போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித்தர பண மோசடி செய்​த​தாக கூறி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை அமலாக்​கத் துறை கைது செய்​தது. இந்த வழக்​கில் ஜாமீன் கோரி செந்​தில் பாலாஜி தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், வாரந்​தோறும் திங்​கள் மற்​றும் வெள்​ளிக்​கிழமை​களில் சென்னை அமலாக்​கத்​துறை இணை இயக்​குநர் அலு​வல​கத்​தில் ஆஜராக வேண்​டும்.

போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாக பதிவு செய்​துள்ள ஊழல் வழக்​கு​களை விசா​ரித்து வரும் மத்​திய குற்​றப்​பிரிவு விசா​ரணை அதி​காரி முன் மாதத்​தின் முதல் சனிக்​கிழமை ஆஜராக வேண்​டும் என்ற நிபந்​தனை​களு​டன் ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், வாரந்​தோறும் திங்​கள் மற்​றும் வெள்​ளிக்​கிழமை​களில் சென்னை அமலாக்​கத்​துறை இணை இயக்​குநர் அலு​வல​கத்​தில் காலை 11 முதல் நண்​பகல் 12 மணிக்​குள் ஆஜராக வேண்​டும் என்ற நிபந்​தனையை தளர்த்​தக் கோரி செந்​தில் பாலாஜி சார்​பில் வழக்​கறிஞர் ராம் சங்​கர் தாக்​கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிபதி ஜோய்​மால்ய பக்சி அடங்​கிய அமர்வு நேற்று மீ்ண்​டும் விசா​ரித்​தது.

செந்​தில் பாலாஜி சார்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘‘தமிழ்​நாடு போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வதற்​கான பண மோசடி புகார் விவ​காரத்​தில் புலன்​வி​சா​ரணை நிறைவடைந்​து​விட்​டது. குறிப்​பாக, அமலாக்​கத் துறை சார்​பில் குற்​றப்​பத்​திரி​கை​யும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​து​விட்​ட​தால், இந்த வழக்கு தொடர்​பாக மனு​தா​ரர் செந்​தில் பாலாஜி ஆஜராக வற்​புறுத்​தக்​கூ​டாது’’ என்று வாதிட்​டார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோயிப் உசைன் ஆட்சேபம் தெரிவித்து வாதிடும்போது, ‘‘போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதற்கான பண மோசடி விவகாரத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டே, செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது’’ என்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணனும் ஆட்சேபம் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், மனுதாரர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் டீ அருந்துவது தேவையா? என கேள்வி எழுப்பினர்.

பின்னர், “வாரம் இரு​முறை அமலாக்​கத்​துறை அலு​வல​கத்​தில் ஆஜராக தேவை​யில்லை. தேவைப்​பட்​டால் மட்​டும் செந்​தில் பாலாஜியை விசா​ரணைக்​காக நேரில் அழைக்​கலாம். விசா​ரணைக்​காக அழைக்​கும்​போது அதில் இருந்து விலக்கு தேவை என்​றால் செந்​தில் பாலாஜி சம்​பந்​தப்​பட்ட நீதி​மன்​றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் உத்​தர​விட்டனர்.

விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு வழங்க செந்​தில்​பாலாஜி தரப்​புக்கு அறி​வுறுத்​தல் வழங்க வேண்​டும் என அமலாக்​கத்​துறை சார்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது. செந்​தில் பாலாஜி விசா​ரணைக்கு இடைஞ்​சலாக செயல்​பட்​டால் நீதி​மன்​றத்தை நாடலாம் என அமலாக்​கத்​துறை தரப்​புக்கு நீதிபதிகள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT