இந்தியா

தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காமன் காஸ் அமைப்பு தாக்​கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூரிய​காந்த் தலைமையி​லான அமர்வு விசா​ரித்​தது.

காமன் காஸ் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பிர​சாந்த் பூஷண் கூறும்​போது, “தேர்​தலின்​போது கட்​சிகள் பண பலத்தை பயன்​படுத்​து​வது ஜனநாயகத்தை பாதிக்​கிறது. தேர்​தல் செல​வின கட்​டுப்​பாடு​கள் இருந்​தா​லும் அது வேட்​பாள​ருக்கு மட்​டுமே பொருந்​து​வ​தாக உள்​ளது" என்று வாதிட்​டார்.

இந்த வாதத்தை ஏற்​றுக் கொண்ட உச்ச நீதி​மன்​றம், பொதுநல மனு குறித்து பதில் அளிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​துள்​ளது.

          
SCROLL FOR NEXT