இந்தியா

“மாணவர்கள் மன்னிப்பு கேட்க அவசியமில்லை” - ஜென்ஸீ இளைஞர்களை சந்தித்த ராகுல் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் யாரும் மன்​னிப்பு கேட்க வேண்​டிய அவசி​யமில்லை என்று ஜென் ஸீ இளைஞர்​களு​ட​னான சந்​திப்​புக்​குப் பின்​னர் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தெரி​வித்​தார்.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்பாக் போராட்​டம் நடத்திய மாணவர்​களில் 5 பேரை டெல்​லி​யில் ராகுல் காந்தி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மாணவர்​கள் நியாய​மான முறை​யில் போராட்​டம் நடத்​தினர். அவர்​கள் மீது போலீ​ஸாரும், துணை ராணுவப் படை​யினரும் அடக்​கு​முறையைக் கையாண்​டனர். மாணவர்​கள் எந்​தத் தவறும் செய்யவில்​லை. அவர்​கள் யாரிட​மும் மன்​னிப்​புக் கேட்க வேண்டிய அவசி​ய​மும் இல்​லை.

போராட்​டம் முடிந்த பின்​னரும் சமூக வலை​தளங்​களில் மாணவர்கள் தொடர்​பான அவதூறு செய்​தி​கள் பரப்​பப்​பட்டு வருகின்​றன. மாணவர்​களின் உண்​மை​யான கவலை, கோரிக்கைகளை புரிந்​து​கொள்ள பிரதமர் மோடி, மத்​திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தவறி​விட்​டனர். போராட்​டத்​தின்​போது அவர்​கள் எவ்​வாறு தாக்​கப்​பட்​டனர், பயமுறுத்​தப்​பட்​டனர் என்​பதை கேட்டு தெரிந்து கொண்டேன். மாணவர்​கள் நடத்​திய அறப்போ​ராட்​டம் மெய் சிலிர்க்க வைக்​கிறது.

ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் நடத்​திய போராட்​டம் சரி​தான். அவர்​கள் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை்யும் நாட்டின் எதிர்காலத்தை​யும், கொள்​கைகளை​யும் பாது​காத்​துள்​ளனர். குறை​பாடு​கள் நிறைந்த, சரிந்து கொண்​டிருக்​கின்ற ஒரு அமைப்பாகத் தி​கழும் இந்​திய கல்விமுறை குறித்து குறை கூறுவது குற்​றமல்​ல. இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT