விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய விமானத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேசியதாவது:
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாக இந்தியா விளங்குகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்தை உலக நாடுகள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றன. சராசரியாக ஒவ்வொரு 45 நாட்களுக்கும் ஒரு விமான நிலையம் திறந்து வைக்கப்படுகிறது.
உடான் திட்டம் மூலம் சாமானியர்களும் விமானப் பயணம் செய்ய ஏற்றவாறு கட்டணங்கள் குறைக்கப்பட்டன. என்டிஏ ஆட்சியில் நம் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.