இந்தியா

இந்​தியா - ரஷ்யா உறவு வலுவானது: சசி தரூர் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்​தியா வரு​கிறார். இதுகுறித்து காங்​கிரஸ் எம்​.பி சசிதரூர் கூறிய​தாவது: ரஷ்​யா​வுட​னான உறவு பழமை​யானது, முக்​கிய​மானது மற்​றும் வலுவானது. அமெரிக்​கா, சீனா, ரஷ்​யா​வுடன் நாம் சுமுக​மான உறவை வைத்​துக் கொள்ள வேண்​டும்.

எந்த நாட்​டின் நலனுக்​காக​வும், இந்​தியா தனது பொருளா​தா​ரத்தை அடமானம் வைக்க முடி​யாது. அனைத்து நாடு​களு​ட​னும் நாம் தன்​னிச்​சை​யான உறவை வைத்​துக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு சசிதரூர் கூறி​னார்.

ரஷ்​யா​வின் மாஸ்கோ நகரில் நடை​பெற்ற முதலீட்​டாளர்​கள் கூட்​டத்​தில் அதிபர் புதின் பேசும்போது, "எரிசக்​தி, தொழில்​துறை, விண்​வெளி, வேளாண்மை மற்​றும் இதர துறை​களில் இந்​தியா மற்றும் சீனா​வுட​னான ஒத்​துழைப்பு அதி​கரித்து வரு​கிறது" என்றார்​.

SCROLL FOR NEXT