இந்தியா

“கவுதம் அதானிக்காகவே அணு சக்தி மசோதா நிறைவேற்றம்” - காங்கிரஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடரில் அணு சக்தி மசோதா 2025 நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​மூலம் இந்​தி​யா​வின் அணு சக்தி துறை​யில் தனி​யாரும் பங்​கேற்க வழி​வகை செய்​யப்​பட்டு இருக்​கிறது.

இந்த மசோதா தொடர்​பாக காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்த நாட்​டின் தேசிய பாது​காப்பு அங்​கீ​கார சட்​டத்​தில் கையெழுத்​திட்டு உள்​ளார். இதில் அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான அணு சக்தி பொறுப்பு விதி​கள் தொடர்​பான அம்​சங்​கள் இடம் பெற்​றுள்​ளன.

அணு சக்தி மசோதாவை ட்ரம்ப் சட்​டம் என்றே அழைக்​கலாம்" என்று குற்​றம் சாட்​டி​னார். இதைத் தொடர்ந்து ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்​டுமன்​றி, அதானிக்​காக​வும் அணு சக்தி மசோதா நிறைவேற்​றப்​பட்டு இருக்​கிறது" என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக காங்​கிரஸ் வட்​டாரங்​கள் கூறும்​போது, “அணு மின்​சார உற்​பத்​தி​யில் அதானி குழு​மம் ஈடு​படும் என்று அதன் தலை​வர் கவுதம் அதானி அண்​மை​யில் அறி​வித்​தார். இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்​றப்​பட்​டு, தனி​யார் பங்​கேற்க சட்​டப்​பூர்​வ​மாக அனு​மதி வழங்​கப்​பட்டு இருக்​கிறது. அதானிக்​காகவே அணு சக்தி மசோதா நிறைவேற்​றப்​பட்​டிருக்​கிறது" என்​றன.

SCROLL FOR NEXT