இந்தியா

தமிழர்களுக்காக தொடர்ந்து போராடிய தலைவர் வைகோ: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழர்​களுக்​காகத் தொடர்ந்து போராடிய தலை​வர் வைகோ என்று சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் பாராட்​டி​யுள்​ளார்.

மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ​வின் நாடாளு​மன்ற உரைகள் அடங்​கிய ‘நா​டாளு​மன்​றத்​தில் வைகோ’ என்ற புத்தக வெளி​யீட்டு விழா டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் பேசி​ய​தாவது: தமிழர்​களுக்​காக தொடர்ந்து போராடிய தலை​வர் வைகோ​வின் ஆவேசமிக்​கப் பேச்​சுக்​கள் எனக்​குப் பெரும் ஊக்​க​மாக இருந்​தன. தமிழ்​நாட்​டின் குரலாக நாடாளு​மன்​றத்​தில் ஒலித்த அவரின் உணர்ச்​சிப்​பூர்​வ​மான உரைகள், டெல்​லிக்கு அப்​பால் உள்ள மக்​களின் மனதை​யும் தொட்​டன.

=

மேடை​யில் வைகோவைப் பார்க்​கும்​போது அவருக்கு 82 வயது போல் தெரிய​வில்​லை. சமாஜ்​வாதி கட்​சி​யின் சிவப்​புத் தொப்​பியை அவர் அணிந்​திருக்​கும் போது 28 வயது இளைஞர் போல் தோற்​றமளிக்​கிறார். வைகோ​வின் புத்​தகத்​தைப் படிப்​ப​தன் மூலம் நானும் எனது தொகுதி மக்​களோடு மேலும் நெருக்​க​மாக இணைய விரும்​பு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். வழக்கமாக கூட்டங்களில் இந்தி மொழியில் பேசும் அகிலேஷ் யாதவ் இந்நிகழ்ச்சி யில் ஆங்கிலத்தில் பேசினார். அவரது உரை சமூக ஊடகங்களில் வைராலாகி வருகிறது.

SCROLL FOR NEXT