இந்தியா

பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படும்: தெலங்கானா மாநில முதல்வர் எச்சரிக்கை

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: பெற்​றோரை கைவிட்​டால் மாநில அரசு ஊழியர்​களின் ஊதி​யத்​தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்​தம் செய்​யப்​பட்​டு, அது அவர்​களின் பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும் என தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்டி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ஹைத​ரா​பாத் பிரஜா பவனில் நேற்று ‘பால பரோ​சா’ மற்​றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்​டங்​களை தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் மாற்றுத் திற​னாளி​களுக்கு ரூ.50 கோடி மதிப்​புள்ள உபகரணங்​களை வழங்​கி​னார். இதில் அவர் பேசும்​போது, இந்த அரசு உங்​களுக்​காக உள்​ளது என்​பதை உரக்க கூறவே இந்த திட்​டங்​களை கொண்டு வந்​துள்ளோம். மாற்றுத் திற​னாளி​கள் ஒரு​வருக்​கொரு​வர் திரு​மணம் செய்து கொண்​டால் அந்த ஜோடிக்கு அரசு தரப்​பில் ரூ.2 லட்​சம் நிதி உதவி வழங்​கப்​படும். அதே சமயத்​தில் மாற்றுத் திற​னாளியை திரு​மணம் செய்​பவருக்கும் ரூ.2 லட்​சம் வழங்கப்​படும். அரசுப் பணி​யிலும் மாற்றுத்திற​னாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்​கப்​படு​கிறது.

இதே​போன்று விளை​யாட்டு துறை​யில் சாதிக்​கும் மாற்றுத் திற​னாளி​களுக்​கும் அரசு பணி ஒதுக்​கப்​படு​கிறது. மேலும் மூன்​றாம் பாலினத்​தவருக்​கும் அரசு பணி​யில் இட ஒதுக்​கீடு, இந்​திரம்மா வீடு​கள் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

பிரணய் திட்​டம் மூலம் முதி​யோரை நல்ல வழி​யில் பாது​காக்க இந்த அரசு தீர்​மானித்​துள்​ளது. இதனால் இனி பெற்​றோரை ஒதுக்கி வைத்​தாலோ, அனாதை இல்​லங்​களில் சேர்த்​தாலோ, கைவிட்​டாலோ அரசு ஊழியர்​களின் ஊதி​யத்​தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதா​மாதம் பிடித்​தம் செய்​து, அப்​பணத்தை கைவிடப்​பட்ட பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும். பெற்​றோரை கைவிடு​பவர்​களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண்​டும். பெற்​றோருக்கு உபயோகப்​படா விட்​டால், அவர்​கள் இந்த சமூகத்​துக்கு எப்​படி உபயோகப்​படு​வார்​கள்?

ஒவ்​வொருக்​கும் மருத்​துவ வசதி கிடைக்க வேண்​டும் என்​பதே என் லட்​சி​யம். சாதி​வாரி கணக்​கெடுப்​பின் அறிக்​கை​யின்படி நம் மாநிலத்​துக்கு நிதி வழங்க வேண்​டும். நம்​முடைய

பிடி​வாதத்​தால் தான் மத்​திய அரசு இறங்கி வந்து சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​துகிறது. இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்​.

விடுப்பு எடுத்ததில்லை: இக்​கூட்​டத்​தின் போது தெலங்​கானா அரசு ஊழியர்​கள் சங்​கத்​தினர் சார்​பில் 2026-ம் ஆண்டின் டைரியை முதல்​வர் ரேவந்த் ரெட்டி வெளி​யிட்டு பேசும்போது, அரசில் உள்ள சுமார் 200 பேர் மட்​டுமே இந்த மாநிலத்தை ஆண்டு விட முடி​யாது. 10.50 லட்​சம் அரசு ஊழியர்​களால் தான் இந்த மாநிலத்தை சிறப்​பாக ஆள முடிகிறது. நான் முதல்​வ​ராக பதவி ஏற்​ற​தில் இருந்து இது வரை ஒரு​நாள் கூட விடுப்பு எடுத்​த​தில்​லை. விடுப்பு எடுக்​கலாம் என நினைத்​தால் கூட ஏதோ சில பணி​களின் காரண​மாக விடுப்பு எடுக்க முடி​யாமல் போய் விடு​கிறது. ஒவ்​வொரு அரசு ஊழியருக்கு ரூ.1 கோடி காப்​புரிமை எடுக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது என்றார்.

SCROLL FOR NEXT