இந்தியா

வெளிநாடுகளுக்கான நிதியுதவிக்கு ரூ.5,685 கோடி ஒதுக்கீடு: வங்கதேசத்துக்கான உதவி 50% குறைப்பு

மத்திய பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய பட்​ஜெட்​டில் வெளி​நாடு​களுக்கு வழங்கப்படும் நிதி​யுதவிக்​காக ரூ.5,685.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளி​யுறவு அமைச்​சகத்​துக்கு 2026-27 நிதி​யாண்​டுக்​காக மொத்தம் ரூ.22,118.97 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதில், ‘மத்திய துறை திட்​டங்​கள் / திட்​டப்​பணி​கள் – நாடு​களுக்​கான உதவி' என்ற தலைப்​பின் கீழ் ரூ.5,685.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

          

பட்​ஜெட் ஆவணங்​களின்​படி, பூடான் அதி​கபட்​ச​மாக ரூ.2,288.56 கோடியைப் பெற்​றுள்​ளது. இது தனது நெருங்​கிய அண்டை நாட்டுட​னான வளர்ச்​சிப் பங்​களிப்​பில் இந்​தி​யா​வின் தொடர்ச்சியான கவனத்தை உறு​திப்​படுத்​துகிறது. இதைத் தொடர்ந்து நேபாளத்​துக்கு ரூ.800 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

வங்​கதேசத்​துக்​கான நிதி​யுதவி 50% சரிவைக் கண்​டுள்​ளது. கடந்த பட்​ஜெட் ஆண்​டில் ரூ.120 கோடி​யாக இருந்த நிதி, 2026-27-ல் ரூ.60 கோடி​யாகக் குறைந்​துள்​ளது. வங்​கதேசத்​தில் சிறு​பான்​மை​யினர் மீதான தாக்​குதல்​ காரணமாக இரு நாடு​களுக்​கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பின்​னணி​யில் நிதி குறைக்கப்​பட்​டுள்​ளது.

இலங்​கைக்​கான ஒதுக்​கீடு ரூ.300 கோடியி​லிருந்து ரூ.400 கோடியாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது, மியான்​மர் ரூ.300 கோடி, மாலத்தீவு ரூ.550 கோடி, லத்​தீன் அமெரிக்க நாடு​களுக்கு ரூ.120 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. ஆப்​கானிஸ்​தானுக்​கான உதவி ரூ.100 கோடியி​லிருந்து ரூ.150 கோடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது, மொரிஷியஸுக்​கான உதவி ரூ.550 கோடி​யாக உள்​ளது. வெளிநாடு​களுக்​கான பேரிடர் நிவாரண ஒதுக்​கீடு ரூ.80 கோடியாகவே நீடிக்​கிறது.

ஒரு குறிப்​பிடத்​தக்க மாற்​ற​மாக, 2026-27 பட்​ஜெட்​டில் ஈரானின் சபஹார் துறை​முகத் திட்​டத்​துக்கு எந்த நிதி​யை​யும் ஒதுக்​க​வில்​லை. மூலோ​பாய இணைப்​புத் திட்​ட​மான இதற்கு கடந்த சில ஆண்​டு​களாக தொடர்ந்து ஆண்​டுக்கு சுமார் ரூ.100 கோடி ஒதுக்கி வந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT