இந்தியா

திருப்பதியில் ரூ.35,000 கோடியில் ஆன்மிக நகரம் - 1,400 ஏக்கரில் அமைக்கிறது ஆந்திர சுற்றுலா துறை

5,000 ஆண்டு இந்து மதக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக..!

என்.மகேஷ்குமார்

திருப்பதி: ஆந்​தி​ரா​வில் 5,000 ஆண்டு இந்து மதக் கலாச்​சா​ரத்தை பிர​திபலிக்​கும் வகை​யில், ரேணி​குண்​டா​வில் ஆன்​மிக நகரம் அமை​கிறது.

ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆலோ​சனை​யின்​படி, டெல்லா டவுன்​ஷிப் நிறு​வனம் திருப்​ப​தி​யில் ஆன்​மிக நகரத்தை உரு​வாக்க முன்​வந்​துள்​ளது. இந்து மதக் கலாச்​சா​ரத்தை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்​வதே இதன் நோக்​கம். சுமார் 5,000 ஆண்​டு​கள் பழமை​யான இந்து மதக் கலாச்​சா​ரம் தொடக்​கம் முதல் வருங்​கால சந்​த​தி​யினரும் அறி​யும் வகை​யில் இந்​நகரம் அமை​கிறது.

சனாதன தர்​மம் என்​பது என்ன? அதன் தனித்​து​வம் என்ன? இதன் நோக்​கம் என்ன? இது தோன்​றிய வரலாறு, கலாச்​சா​ரம், ஐதீகம், இந்​துக்​களின் பழக்க வழக்​கங்​கள் ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் எவ்​வாறு மாறு​படு​கிறது என்​பது போன்ற விளக்​கங்​களு​டன் இந்​நகரம் பிரம்​மாண்​ட​மாக கட்​டப்​படு​கிறது. ராமாயணம், மகா​பாரதம் உட்பட பல்​வேறு இதி​காசங்​கள், இந்து புராணங்​கள் இருக்​கும் வகை​யில் இந்த ஆன்​மீக நகரம் அமைக்​கப்பட உள்​ளது.

இந்​துக்​களின் மெய்​ஞான அறி​வு, சூரியனை சுற்​றி​தான் கிரகங்கள் சுழல்​கின்றன என்ற அறி​வு, பல்​லா​யிரம் ஆண்​டு​களுக்கு முன்பே பஞ்​சாங்​கத்தை கணித்த திறன், கலாச்​சா​ரம், ஆச்​சா​ரம் போன்​றவற்றை தெரி​வித்து நாடு முழு​வ​தி​லும் உள்ள இந்​துக்​களை ஒன்​று​படுத்​து​வதை திட்​ட​மாக கொண்டு இந்த ஆன்மிக நகரம் உரு​வாக்​கப்​படு​கிறது. இங்கு 300 ஏக்​கரில், ‘வாழ்வியல் கண்​காட்சி நகரம்’ உரு​வாக்​கப்பட உள்​ளது.

வேதத்​துக்​கென தனி கண்​காட்சி மையம் அமைக்​கப்பட உள்​ளது. சாஸ்​திரிய கலைகள், கோயில் கட்​டு​மான பணி​கள், ஒவ்​வொரு மாநிலங்​களி​லும் உள்ள சனாதன முறை, ஐதீகம் உள்ளிட்டவையும் தெள்​ளத் தெளி​வாக தெரிவிக்​கப்பட உள்​ளன. மேலும் இதில் நம் நாட்​டில் உள்ள யூனியன் பிரதேசங்​களில் உள்ள கலாச்​சா​ரங்​களும் விவரிக்​கப்பட உள்​ளன. வாழ்​வியல் ஆன்​மிக நகரத்​துடன், பிரம்​மாண்​ட​மான ஓட்​டல்​கள், தனி​யார் விடு​தி​கள், வில்​லாக்​கள் போன்​றவை​யும் ஏற்​பாடு செய்​யப்பட உள்​ளது.

600 அறை​கள் கொண்ட 5 நட்​சத்​திர ஓட்​டலும், மிக பிரம்மாணடமான திருமண மண்​டபங்​களும் இங்கு அமைக்கப்பட உள்​ளன. இந்த ஆன்​மிக நகரம் அமைப்​ப​தின் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும் என ஆந்​திர அரசு தெரி​வித்​துள்​ளது. இதில் 80 சதவீதம் உள்​ளூர்​வாசிகளுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​க​வும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT