இந்தியா

வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் அனுப்பி ஐநாக்ஸ் ​நிர்வாக இயக்குநர் பெயரில் ரூ.10.4 கோடி மோசடி

செய்திப்பிரிவு

மும்பை: ஐநாக்ஸ் நிறு​வனத்​தில் துணை தலைமை மேலா​ள​ராகப் பணி​யாற்​று​பவர் கிரிஸ் அமின். இவருக்கு தெரி​யாத எண் ஒன்றில் இருந்து நிர்​வாக இயக்​குநர் சித்​தார்த் ஜெயின் போட்டோவுடன் வாட்ஸ் அப் தகவல் ஒன்று வந்​தது.

அதில் ‘இது எனது தனிப்​பட்ட போன் எண், இதை யாரிட​மும் தர வேண்​டாம். சித்​தார்த் ஜெயின்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 3-ம் தேதி அதே எண்​ணில் இருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்​தது. அதில் ஒரு வங்​கிக் கணக்கை குறிப்​பிட்​டு, கம்​பெனி கணக்​கில் இருந்து ரூ.46.5 லட்​சத்தை அனுப்ப​வும் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. அதன்படி அந்த வங்​கிக் கணக்​குக்கு ரூ.46.5 லட்​சத்தை அமின் அனுப்​பி​னார்.

இது​போல அடுத்​தடுத்து 63 முறை மொத்​தம் ரூ.10 கோடியே 40 லட்சத்து 71,924-ஐ அனுப்​பி​யுள்​ளார். இந்​நிலை​யில், கடந்த செவ்​வாய்க்​கிழமை அமின் தனது முதலா​ளியை அலு​வலக லேண்ட்லைன் மூலம் தொடர்பு கொண்டு அனுப்​பப்​பட்ட பணத்துக்கு ரசீதுகளைக் கேட்​டுள்​ளார். அப்​போது, சித்​தார்த் ஜெயின் நான் எப்​போது பணம் அனுப்ப சொன்​னேன் என்று கேட்டுள்​ளார். அப்​போது​தான் மிகப் பெரிய மோசடி நடை​பெற்​றது தெரிந்​தது.

இதுகுறித்து ஐநாக்ஸ் நிறு​வனம் சார்​பில் மும்பை போலீ​ஸில் புகார் அளிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் நடத்​திய புலன் விசாரணையில் பணம் டெல்​லி​யில் உள்ள வங்கி கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டது தெரிய வந்​தது. இதுகுறித்து டெல்லி போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அவர்கள் சம்​பந்​தப்​பட்ட வங்​கி​களைத் தொடர்பு கொண்​டு, மோசடி நபர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் இருந்து யாராவது பணம் எடுக்க வந்​தால் தகவல் தெரிவிக்​கும்​படி கூறினர்.

4 பேர் கைது

டெல்லி ஐடிஎப்சி வங்கி ஜசோலா கிளை​யில் உள்ள வங்​கிக் கிளைக்​குத் தங்​கள் வங்கி கணக்​கில் இருந்து ரூ.8 லட்​சம் பணம் எடுக்க 2 பேர் வந்​தனர். வங்கி அதி​காரி​கள் அளித்த தகவலின்​படி போலீ​ஸார் விரைந்து வந்து அந்த 2 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், தங்​கள் வங்கி கணக்குக்கு வரும் பணத்தை எடுத்​துக் கொடுத்​தால் ரூ.30,000 கமிஷன் தரு​வ​தாக சிலர் கூறிய​தால் தங்​கள் வங்கி கணக்கை மர்ம நபர்​களிடம் தெரி​வித்​த​தாக கூறினர். இதுதொடர்​பாக மேலும் 2 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். மோசடிக்கு மூளையாக செயல்​பட்டவரை போலீஸார் தேடி வருகின்றனர்​.

SCROLL FOR NEXT