கொல்கத்தா: நாடு முழுவதையும் உலுக்கிய கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக புதிய விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி நேற்று உத்தரவிட்டார்.
கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற இக்கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவரின் தாயாரும், தற்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான ரத்னா தேப்நாத், இக்கொலை தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தக் கோரி முதல்வர் சுவேந்து அதிகாரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கையைத் தொடர்ந்து, மாநில தலைமைச் செயலாளர் மற்றும் துறை சார்ந்த நிபுணர் குழுவினருடன் விரிவான ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், இச்சம்பவம் குறித்து சிறப்பு ஆணையச் சட்டம் 1952-ன் கீழ் புதிய விசாரணை முறைப்படி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், காவல் துறையினர் கடமை தவறியதாகச் சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பெண்ணின் உடல் தகனத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து தனியாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.