இந்தியா

கார்கே பங்கேற்ற கூட்டத்துக்குப் பின் ‘சுத்திகரிப்பு’: பாஜக மீது வழக்கு பதிவு செய்ய ராகுல் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்​த​ராகண்ட் மாநிலம் ஹல்த்​வானி​யில் உள்ள ராம்​லீலா மைதானத்​தில், கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்​றார். அதனைத் தொடர்ந்​து, ஆகஸ்ட் 10-ம் தேதி அந்த மைதானத்​தில் வலது​சாரி அமைப்​பினர் மற்​றும் பாஜக - ஆர்​எஸ்​எஸ் ஆதர​வாளர்​கள் ‘சுத்​தி​கரிப்​பு’ (புனிதப்​படுத்​தும்) சடங்​கு​களை மேற்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இவ்​விவ​காரத்தை ஆகஸ்ட் 19 அன்று நடை​பெற்ற காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தி​லும், நாடாளு​மன்​றத்​தி​லும் கார்​கேவே நேரடி​யாக எழுப்​பி தனது ஆதங்​கத்​தைப் பதிவு செய்​திருந்​தார்.

இந்​நிலை​யில், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

உத்​த​ராகண்​டில் காங்​கிரஸ் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பங்​கேற்ற கூட்​டம் முடிந்த பிறகு, சுத்​தி​கரிப்பு செய்த சம்​பவம் நடந்து 20 நாள்​கள் கடந்​தும் பாஜக அரசு எவ்​வித சட்ட நடவடிக்​கை​யும் எடுக்​காமல் மவுனம் காக்​கிறது. ‘சுத்​தி​கரிப்​பு’ என்ற பெயரில் நடத்​தப்​படும் இத்​தகைய சடங்​கு​கள் தீண்​டா​மை​யின் மற்​றொரு வடிவமே தவிர வேறில்​லை.

அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின்​படி தீண்​டாமை ஒழிக்​கப்​பட்​டு​விட்ட போதி​லும், பாஜக​வினர் அதனை இன்​றும் தீவிர​மாகப் பின்​பற்றி வரு​கின்​றனர். நமது அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்​கும் பாஜக - ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பிற்​போக்கு சிந்​தனைக்​கும் இடையே நடை​பெறும் இந்த கருத்​தி​யல் போரில் காங்​கிரஸ் தலை​வர் கார்​கேவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்​டும்.

பிரதமர் மோடி தன்னை அனை​வருக்​கும் பொது​வானவர் எனக் கூறிக்​கொள்​ளும் நிலை​யில், உத்​த​ராகண்ட் மாநில பாஜக தலை​வர் இச்​செயலை நியாயப்​படுத்​திப் பேசுகிறார். பட்​டியலினத்​தவர் மரி​யாதை​யுட​னும் வளமாக​வும் வாழ்​வதை பாஜக விரும்​புவ​தில்லை என்​ப​தையே இது காட்​டு​கிறது.

எனவே, இச்​சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது எஸ்​சி/எஸ்டி வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின்​ கீழ் உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்​யப்பட வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT