புதுடெல்லி: இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: இது அற்பமான செயல். குடியரசுத் தலைவர் பதவி என்பது எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையது அல்ல. கட்சி சாராதது ஆகும். அனைத்து கட்சியினரையும் சமமாக நடத்த வேண்டும்.
அனைத்துக் கட்சித் தலைவர்களையும் குடியரசுத் தலைவர் அழைத்திருக்க வேண்டும். ஆளுங்கட்சித் தரப்பு மட்டுமே அழைக்கப்பட்டது மிகவும் அற்பமானது. இவ்வாறு அவர் கூறியுளளார்.