இந்தியா

“கர்நாடக முதல்வர் பதவி பற்றி ராகுல் காந்தி முடிவெடுப்பார்” - கார்கே கருத்துக்கு சித்தராமையா பதில்

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் பதவி காலம் கடந்த நவம்​பர் 20-ம் தேதி​யுடன் இரண்​டரை ஆண்​டு​கள் நிறைவடைந்​தது. இதனால் துணை முதல்​வர் டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். இதற்கு சித்​த​ராமையா மறுப்பு தெரி​வித்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே​விடம் செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பியபோது, ‘‘காங்​கிரஸை பொறுத்​தவரை கட்சிதான் முக்​கி​யம். தனி​நபர்​கள் கட்​சி​யை​விட பெரிய​வர்​கள் கிடை​யாது. முதல்​வர் பதவி விவ​காரத்​தில் கட்சி மேலிடம் உரிய நேரத்​தில் முடி​வெடுக்​கும்​” என பதிலளித்​தார்.

அதற்கு முதல்​வர் சித்​த​ராமையா தனது எக்ஸ் பக்​கத்​தில், ‘‘காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்கே சொல்​வதை நான் ஏற்​றுக் ​கொள்​கிறேன். கட்​சியை விட பெரிய​வர்​கள் யாரும் இல்​லை. முதல்​வர் பதவி யாருக்கு என்​பதை ராகுல் காந்தி முடி​வெடுப்​பார். அவர் எடுக்​கும் முடிவை நான் ஏற்​று​கொள்​வேன். இதுகுறித்து கட்சி மேலிடத் தலை​வர்​களிடம் நான் ஏற்​கெனவே பேசி​யுள்​ளேன்” என தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT