இந்தியா

“இந்தியாவை இழிவுபடுத்துகிறார் ராகுல் காந்தி” - அமித் ஷா கடும் தாக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி ஏஐ மாநாட்​டில் இளைஞர் காங்​கிரஸார் அரை நிர்​வாண போ​ராட்​டங்​களை நடத்​தி​யதன் மூலம் இந்​தி​யா​வை​ உலக நாடு​களின் மத்​தி​யில் ராகுல் காந்தி இழி​வுபடுத்தி வரு​கிறார் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று தெரி​வித்​தார்.

அசாம் மாநிலம் குவா ஹாட்டியில் ரூ.2,092 கோடி மதிப்பிலான நலத் திட்​டங்​களை நேற்று தொடங்கி வைத்த அமித் ஷா பேசியதாவது: தலைநகர் டெல்​லி​யில் பாரத் மண்​டபத்​தில் கடந்த மாதம் நடை​பெற்ற செயற்கை நுண்​ணறிவு தாக்க மாநாட்​டின் போது, இளைஞர் காங்​கிரஸார் மேலாடை​யின்றி அரைநிர​வாணப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இது, கடும் கண்​டனத்​துக்கு உரியது.

          

பிரதமர் மோடியை​யும் பாஜகவை​யும் விமர்​சிக்​கிறேன் என்ற பெயரில் ராகுல் காந்தி இந்​தி​யா​வையே இது​போன்ற போராட்டங்களின் மூலம் எதிர்க்​கத் தொடங்​கி​யுள்​ளார். சர்​வ​தேச நாடு​கள் பங்​கேற்ற மாநாட்​டில் ஆடையைக் களைந்து போராட்டம் நடத்​தி​யதன் மூலம் காங்​கிரஸ் கட்சி நாட்​டுக்கு அவப்பெயரை ஏற்​படுத்​தி​யுள்​ளது. நாங்​களும் எதிர்க்​கட்​சி​யாக இருந்​திருக்​கிறோம்.

ஆனால் வரை​முறை​களை தாண்​டிய​தில்​லை. உலகம் முழு​வதும் இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யைப் பார்க்​க​வும், முதலீடு செய்​ய​வும் திரண்​டிருந்த வேளை​யில், அந்​தத் தளத்தை ராகுல் காந்தி தனது சொந்த அரசி​யலுக்​காகப் பயன்​படுத்​திக் கொண்​டார். இந்​தச் செயலுக்கு அவர் மன்​னிப்​புக் கேட்​ப​தற்​குப் பதிலாக, போராட்டத்தில் ஈடு​பட்​ட​வர்​களை சிங்க இதயம் கொண்​ட​வர்​கள் என்று பாராட்டி பேசி​யது அவரது பொறுப்​பற்​றத்தனத்தை எடுத்துக்​ காட்​டு​கிறது.

பாஜகவை எதிர்ப்​ப​தற்கு உங்​களுக்கு முழு உரிமை உண்​டு, ஆனால் உலக அரங்​கில் இந்​திய இளைஞர்​களுக்​கான வாய்ப்புகளை இது போன்ற போராட்​டங்​கள் முடக்​கிப் போட்டுவிடும். உங்களை மக்​கள் மன்​னிக்க மாட்​டார்​கள். சுகாதாரத் துறை​யில் சாதனை சுகா​தா​ரத் துறை​யில் அசாம் தன்னிறைவு பெற்​றுள்​ளது.

புற்​று​நோய் சிகிச்​சைக்​காக சென்​னை, மும்​பை, கர்​நாடகா மற்றும் டெல்லி போன்ற பல இடங்​களுக்கு அலைந்த அசாம் மக்கள், இனி தங்​கள் மாநிலத்​திலேயே உயர் சிகிச்சை பெறும் வசதி செய்​யப்​பட்​டுள்​ளது. இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க ரஷ்யா, உக்ரைன் மற்றும் பல சிறிய நாடுகளுக்கு செல்கின்றனர். சில நேரங்களில் தங்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் ஏற்படுகிறது.

எனவே, இந்திய மாணவர்கள் உள்நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு போதிய வசதிகளை செய்து கொடுப்பது முக்கியம். இங்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால், இந்திய மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT