ராகுல் காந்தி

 
இந்தியா

மத்திய அமைச்சரின் மகன் தொடுத்த அவதூறு வழக்​கில் வருத்​தம் தெரி​வித்​தார் ராகுல் காந்தி

வழக்​கை​ தள்​ளு​படி செய்ய நீதிமன்றத்தில் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஜபல்​பூர்: மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கானின் மகன் கார்த்​தி​கேய சிங் தாக்​கல் செய்த அவதூறு வழக்​கில், ராகுல் காந்தி சார்​பில் மத்​திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​தில் வருத்​தம் தெரிவிக்​கப்​பட்​டது.

மத்​தி​ய பிரதேசத்​தின் ஜகாபுவா பகு​தி​யில் கடந்த 2018ம் ஆண்டு தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு சென்ற மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பனாமா பேப்​பர் ஊழல் குறித்து பேசி​னார். அப்​போது இதில் மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் சிங்​கின் மகன் கார்த்​தி​கேயா சிங்​கிற்​கும் தொடர்பு உள்​ள​தாக ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்​தார்.

இதையடுத்து ராகுல் மீது, போபால் நீதி​மன்​றத்​தில் கார்த்​தி​கேயா சிங் அவதூறு வழக்கு தாக்​கல் செய்​தார். இந்த வழக்​கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்​படி நீதி​மன்​றம் சம்​மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தனது வழக்​கறிஞர் மூலம் நேற்று முன்​தினம் ஒரு மனுவை தாக்​கல் செய்​திருந்​தார்.

அதில் “தனது கருத்து கார்த்​தி​கேயா சிங் தொடர்​புடையது அல்ல. இருந்​தா​லும் தான் தெரி​வித்த கருத்து அவரை புண்படுத்தியிருந்தால் அதற்​காக வருந்​துகிறேன். எனக்கு அனுப்பப்​பட்ட சம்​மனை​யும், இந்த அவதூறு வழக்​கை​யும் தள்ளுபடி செய்ய வேண்​டும்” என கூறி​யிருந்​தார். இந்த வேண்டுகோள் குறித்து நீதிப​தி பிரமோத் குமார் அகர்வால் பரிசீலித்து வருகிறார்.

SCROLL FOR NEXT