இந்தியா

“ட்ரம்பிடம் அடிபணிந்து விட்டார் பிரதமர் மோடி” - ராகுல் மீண்டும் விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பிடம், பிரதமர் மோடி அடிபணிந்​து​விட்​டார்” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி மீண்​டும் விமர்​சனம் செய்​துள்​ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்​வாய்க்​கிழமை சமூக வலை​தளத்​தில் ஒரு பதிவை வெளி​யிட்​டார். அதில், ‘சார்.. உங்​களை பார்க்​கலா​மா?’ என்று பிரதமர் மோடி என்​னிடம் தனிப்​பட்ட முறை​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். நானும் ‘யெஸ்’ என்​றேன். அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டர்​கள் விவ​காரம் தொடர்​பாக பேசினோம். பிரதமர் மோடி​யுடன் எனக்கு நல்ல நட்​புறவு உள்​ளது.

ஆனால், ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்​தேன். இதனால் பிரதமர் மோடிக்கு என் மீது மகிழ்ச்சி இல்​லை. இப்​போது ரஷ்​யா​விடம் எண்​ணெய் வாங்​கு​வதை குறைத்​துக் கொண்​டுள்​ளனர்” என்​றார்.

இதைச் சுட்​டிக் காட்​டி​யும் தான் பேசிய பழைய வீடியோ ஒன்றை வெளி​யிட்​டும் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா - பாகிஸ்​தான் இடையே நடை​பெற்ற போரின்போது, ட்ரம்ப்​பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்​தவுடன், பிரதமர் மோடி சரணடைந்துவிட்​டார்.

கடந்த 1971-ல் பாகிஸ்​தானுட​னான போரின் போது, தனது போர்க் கப்​பலை அனுப்பி இந்​தி​யாவை அமெரிக்கா மிரட்​டியது. எனினும் அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அடிபணி​ய​வில்​லை. இது​தான் இந்​திரா காந்​திக்​கும் பிரதமர் மோடிக்​கும் உள்ள வித்​தி​யாசம்​ என தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT