இந்தியா

பாஜகவின் 6-ல் ஒரு மக்களவை எம்.பி. வாக்குத் திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்: ராகுல் காந்தி விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சில நேரங்​களில் இடங்​களைக் கைப்​பற்​ற​வும், சில நேரங்​களில் ஒட்​டுமொத்த அரசுகளையே கவிழ்க்​க​வும் வாக்​கு​கள் திருடப்படுகின்​றன.

மக்​களவை​யில் உள்ள 240 பாஜக எம்​.பி.க்​களில், தோராய​மாக ஒவ்​வொரு 6-வது எம்​.பி.​யும் (6-ல் ஒரு​வர்) வாக்​குத் திருட்டு மூலமே வெற்றி பெற்​றுள்​ளார். அவர்​களைக் கண்​டறிவது கடினமல்ல. பாஜக பாணி​யிலேயே அவர்​களை ‘ஊடுரு​வல்​காரர்​கள்’ என்று அழைக்​கலா​மா ? ஹரி​யா​னாவைப் பொறுத்​தவரை, அங்​குள்ள ஒட்​டுமொத்த அரசாங்​கமே ஊடுரு​வல்​ காரர்​கள்​தான்.

அவர்​கள் தங்​கள் பாக்​கெட்​டில் வைத்​திருக்​கும் நிறு​வனங்​கள், வாக்​காளர் பட்​டியல்​கள் மற்​றும் தேர்​தல் நடை​முறை​களில் முறைகேடு செய்​பவை. அவையே ‘ரிமோட் கண்ட்​ரோல்’ மூலம் இயக்​கப்​படு​கின்​றன. உண்​மை​யைக் கண்​டு​தான் அவர்​களுக்​குப் பயம். ஏனெனில், நியாய​மான முறை​யில் தேர்​தல் நடத்தப்பட்டால், அவர்​களால் இன்று 140 இடங்​களைக் கூட வெல்ல முடி​யாது. இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

மேற்கு வங்க பேர​வைத் தேர்​தலில் பாஜக 100-க்​கும் மேற்​பட்ட இடங்​களை கொள்​ளை​யடித்​து​விட்​ட​தாக மம்தா குற்​றம்சாட்டி உள்​ளார். மேலும், தேர்​தல் ஆணை​யத்தை பாஜக​வின் ஆணை​யம் என்று விமர்​சித்த அவர், இந்த வெற்​றியை ஒழுக்​கமற்​றது மற்​றும் சட்​ட​விரோத​மானது என்று குறிப்​பிட்​டார்.

இந்​நிலை​யில், ராகுல் காந்​தி​யின் ‘வாக்​குத் திருட்​டு’ புகார், மம்தா பானர்​ஜி​யின் குற்​றச்​சாட்​டு​களைப் பிர​திபலிப்​ப​தாக அமைந்துள்ளது. மேற்கு வங்​கத்​தில் திரிணமூல் காங்​கிரஸ் கட்சியின் தோல்​வியைக் கொண்​டாடு​வதைத் தவிர்க்​கு​மாறு ராகுல் காந்தி தனது கட்சி பிர​முகர்​கள் மற்​றும் பிற எதிர்க்​கட்​சித் தலை​வர்​களை எச்​சரித்த மறு​நாளே இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT