இந்தியா

மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து ராகுல், அகிலேஷ் தலைமையில் போராட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் நேற்று காலை நாடாளு​மன்​றத்​துக்கு வந்து மாநிலங்​களவை எதிர்க்​கட்சி தலைவர் மல்​லி​கார்​ஜுன கார்கே அறை​யில் ஆலோ​சனை நடத்தினர். அப்​போது நீட் தேர்​வுக்கு எதி​ராக போராடும் மாணவர்களுக்கு ஆதர​வாகக் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்​றத்​துக்கு வெளியே போராட்​டம் நடத்​த​ முடிவு செய்யப்​பட்​டது.

இதையடுத்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல், சமாஜ்வாதி தலை​வர் அகிலேஷ் தலை​மை​யில் எதிர்க்​கட்​சி​யினர் கருப்பு சட்டை அணிந்து நாடாளு​மன்ற வளாகத்​தில் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். இதில் மாநிலங்​கள​வைத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே உட்பட எதிர்க்​கட்சி எம்.பி.க்​கள் பலர் பங்கேற்​றனர்.

மாணவர்​களின் குறை​களை கேட்​காமல், ஜனநாயக முறைப்​படி போராட்​டம் நடத்​தும் மாணவர்​களை மத்​திய அரசு அடக்​கு​வ​தாக குற்​றம் சாட்​டிய எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிரதான் ஆகியோர் ராஜினாமா செய்​யக் கோரி கோஷமிட்​டனர்.

அப்​போது அகிலேஷ் யாதவ் கூறுகை​யில், “கருப்பு என்​பது எதிர்ப்பின் நிறம்; அது துக்​கத்​தின் நிறம். அதனால் நாங்​கள் கருப்பு ஆடை அணிந்து போராடு​கிறோம்” என்​றார்.

காங்​கிரஸ் எம்பி பவன் கேரா பேசுகை​யில், “டெல்​லி​யில் மாணவர்களுக்கு அரசு செய்த கொடுமை​களுக்கு எதி​ராக​வும், அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்​யக் கோரி​யும் நாங்​கள் கருப்பு ஆடை அணிந்து போராடு​கிறோம்” என்​றார்.

மல்​லி​கார்​ஜுன கார்கே பேசுகை​யில், “மத்​திய அரசு சர்வாதிகாரத்தை பின்​பற்​றுகிறது. விதி​களின்​படி போராட்​டம் நடத்துபவர்களைக் ​கூட அவர்​கள் துன்​புறுத்​துகிறார்​கள். மாணவர்​களை​யும் காங்​கிரஸ் தலை​வர்​களை​யும் மறைமுகமாகப் பயமுறுத்​து​வதே அரசின் நோக்​கம். எங்​கள் மூத்த தலை​வர்​களை நசுக்க நினைத்​தால், லட்​சக்​கணக்​கான மக்கள்களத்​தில்​ இறங்​கு​வார்​கள்​. அப்​போது உங்​களால்​ அவர்களைக்​ கட்​டுப்​படுத்​த முடி​யாது” என்​றார்.

SCROLL FOR NEXT