இந்தியா

“நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சரை ஏன் நீக்கவில்லை?” - மோடிக்கு ராகுல் கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்ற நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு காரண​மாக ரத்து செய்​யப்பட்டது. நீட் மறு​தேர்வு ஜூன் 21ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வினாத்தாள் கசிவு வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் இந்த விவ​காரம் தொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட ஒரு பதி​வில் கூறியிருப்பதாவது: கடந்த 2024-ல் நீட் வினாத்​தாள் கசிந்​தது. தேர்வு ரத்து செய்​யப்பட​வில்​லை. அமைச்​சர் பதவி வில​க​வில்​லை.

சிபிஐ விசா​ரணை​யைத் தொடங்​கியது. ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்​போது 2026-ல் வினாத்​தாள் கசிந்​தது. தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது. அப்​போதும் அமைச்​சர் பதவி விலகவில்லை. சிபிஐ மீண்​டும் விசா​ரணை நடத்தி வரு​கிறது. மற்றொரு குழு அமைக்​கப்பட உள்​ளது.

பிரதமரே... தேசம் உங்​களிடம் சில கேள்வி​களை முன்​வைக்​கிறது. அவற்​றுக்​குப் பதிலளி​யுங்​கள். ஏன் வினாத்​தாள் கசிவு​கள் மீண்டும் மீண்​டும் நிகழ்​கின்​றன ? நீங்​கள் ஏன் தொடர்ந்து மவுனம் சாதிக்​கிறீர்​கள் ? மீண்​டும் மீண்​டும் தோல்​வியையே சந்திக்​கும் கல்வி அமைச்​சரை நீங்​கள் ஏன் பதவி நீக்​கம் செய்​ய​வில்​லை ? இவ்​வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​ட​தால் சுமார் 23 லட்​சம் மாணவர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். நீட் தேர்வு நடத்​தும் பொறுப்பை கடந்த 2019ம் ஆண்டு தேசிய தேர்வு முகமை ஏற்​ற​தில் இருந்​து, நீட் தேர்வு முழு​மை​யாக ரத்து செய்​யப்​படு​வது இதுவே முதல் முறை​யாகும்.

SCROLL FOR NEXT