இந்தியா

பஞ்சாப் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: ஹர்பஜன் சிங் எம்.பி.க்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

சண்டிகர்: ஆம் ஆத்​மியைச் சேர்ந்த ராகவ் சத்​தா, ஹர்பஜன் சிங் உள்​ளிட்ட 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் அண்மை​யில் அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைந்​தனர்.

இந்​நிலை​யில், ஜலந்​தரில் உள்ள ஹர்​பஜன் சிங்​கின் வீட்டில் பாது​காப்​புப் பணி​யில் இருந்த பஞ்​சாப் மாநில போலீ​ஸார் நேற்று முன்தினம் விலக்​கிக் கொள்ளப்பட்டனர். மாநில போலீ​ஸாரின் பாது​காப்பு வாபஸ் பெறப்​பட்ட மறு​நாளே (நேற்​று) மத்​திய அரசின் சிஆர்​பிஎப் படை​யினர் ஹர்​பஜன் சிங் வீட்​டில் பாதுகாப்புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

பாஜக​வில் இணைந்​ததைத் தொடர்ந்து ஹர்​பஜன் சிங்​குக்கு மத்​திய அரசின் பாது​காப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. தினந்​தோறும் அவரது வீட்​டுக்கு 9 முதல் 10 சிஆர்​பிஎப் வீரர்​கள் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படு​கின்​றனர். இதனிடையே, கட்​சித் தாவிய எம்​.பி.க்​களை துரோகிகள் என பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் சிங் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT