பீம​ராவ் காம்ப்ளே

 
இந்தியா

புனே: 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 65 வயது முதியவருக்கு மரண தண்டனை

குற்றம் நிகழ்ந்த 60 நாட்களில் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

புனே: மூன்று வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்த 65 வயது முதி​ய​வருக்கு புனே சிறப்பு நீதி​மன்​றம் மரண தண்​டனை விதித்​துள்​ளது. குற்​றம் நிகழ்ந்த 60 நாட்களுக்குள் இந்த தீர்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

மகா​ராஷ்டி​ரா​வின் புனே மாவட்​டம், நஸ்​ராபூர் கிராமத்தை சேர்ந்தவர் பீம​ராவ் காம்ப்ளே (65). இவர் கடந்த மே 1ம் தேதி தாய் வழி உறவினர் வீட்​டுக்கு வந்​திருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்​துள்​ளார். பிறகு சிறுமியை குடும்​பத்​தினர் தேடிய​ போது அவரது உடல் மாட்​டுத் தொழுவத்தில் கண்​டெடுக்​கப்​பட்​டது.

இந்த சம்​பவம் அப்​பகு​தி​யில் பெரும் கொந்​தளிப்பை ஏற்படுத்தியது. நஸ்​ராபூரில் பொது​மக்​கள் சாலை மறியல் மற்​றும் போராட்டங்​களில் ஈடு​பட்​டனர். புனே மாவட்​டத்​தின் பிற பகுதிகளி​லும் போராட்​டங்​கள் நடை​பெற்​றன. குற்​ற​வாளிக்கு கடும் தண்​டனை வழங்க வேண்​டும் என்று உள்​ளூர் மக்​கள் கோரினர். இதற்​கிடை​யில் சம்​பவம் நடந்த அன்றே குற்​ற​வாளி பீமராவ் காம்ப்​ளேவை போலீ​ஸார் கைது செய்​தனர்.

மேலும் 16 நாட்​களுக்​குள் 1,200 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தனர். சிறப்பு நீதி​மன்​றம் மே 28ம் தேதி குற்றச்​சாட்​டு​களை பதிவு செய்​தது. ஜூன் 20ம் தேதி இறுதி வாதங்கள் நிறைவடைந்​தன. ஜூன் 25ம் தேதி முதி​ய​வர் காம்ப்ளேவை குற்​ற​வாளி என நீதி​மன்​றம் அறி​வித்​தது. இந்நிலையில் முதி​ய​வருக்கு நேற்று மரண தண்​டனை விதித்து தீர்ப்பு அளித்​தது.

நீதி​மன்​றம் தனது உத்​தர​வில்,"கடைசி​யாக இரு​வரை​யும் ஒன்றாகப் பார்த்​தது மற்​றும் வலு​வான சூழ்​நிலை ஆதா​ரங்​கள் மூலம் முதி​ய​வர் குற்​றம் இழைத்​ததை அரசுத் தரப்பு வெற்றிகரமாக நிரூபித்​துள்​ளது. குற்​ற​வாளி​யின் செயல் கொடூரமானது, மனி​தாபி​மானமற்​றது, காட்டுமிராண்டித் தனமானது. இக்​குற்​றம் நீதி​சார் மனசாட்​சியை மட்​டுமல்​லாமல், பொது மக்​களின் மனசாட்​சி​யை​யும் உலுக்கியுள்ளது" என்று தெரிவித்​துள்​ளது.

இந்த தீர்ப்பை தேசி​ய​வாத காங்​கிரஸ் எம்​.பி.சுப்​ரியா சுலே வரவேற்​றுள்​ளார். "பா​திக்​கப்​பட்ட சிறுமிக்​கும் அவரது குடும்பத்தினருக்​கும் நீதி கிடைத்​துள்​ளது. விசா​ரணையை புலனாய்வு அதிகாரி​கள் மிகச் ​சிறப்​பாக நடத்​தி, ஆதா​ரங்​களை நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பித்​தனர். அவர்​களுக்​கும் எங்​களது மனமார்ந்த நன்​றி" என்று சுப்​ரி​யா சுலே ‘எக்​ஸ்​' தளத்​தில்​ கூறியுள்ளார்​.

SCROLL FOR NEXT