மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

 
இந்தியா

“ராகுல் தன்னை ஆளப் பிறந்தவராக நினைக்கிறார்” - மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சனம்

வேட்டையன்

சண்டிகர்: தன்னை ஆளப் பிறந்தவர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருதுவதாக மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி சாடியுள்ளார்.

சண்டிகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரஹலாத் ஜோஷி பங்கேற்றார். அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அவர் பேசியிருந்தார்.

“ராகுல் காந்தியின் செயல்பாட்டில் ஏமாற்றமும், விரக்தியும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மாணவர் போராட்டம் குறித்து விவாதிக்கலாம் என்றும், உள்துறை அமைச்சர் விளக்கம் கொடுப்பார் என்றும் தெரிவித்தோம். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

தனது மாண்பு என்ன என்பதை அவர் மறந்துவிட்டார். தன்னை ஆளப் பிறந்தவர் என ராகுல் காந்தி கருதுகிறார்” என்று பேசியிருந்தார்.

தொடர்ந்து ராகுல் காந்தி குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரஹலாத் ஜோஷி ட்வீட் செய்திருந்தார். இதற்கு முன்னதாக காங்கிரஸ் கூட்டத்தில் பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கையை விமர்சிக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டார். அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த ட்வீட் அமைந்துள்ளது.

“மக்கள் 95 முறை புறக்கணித்த போதும் (காங்கிரஸின் தேர்தல் தோல்வி) அதை ஏற்க ராகுல் மறுக்கிறார். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அயலகத்தில் அரசியல் கருத்துகளை பேசுகிறார். ஒரு தலைவராக தன்னை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரதமரை அவமதிப்பதாகக் கருதி மூன்று முறை அவருக்கு தேர்தலில் வாக்களித்து, வெற்றி பெறச் செய்த மக்களை ஏளனம் செய்கிறார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கர்வத்தை கைவிடுங்கள்” என்று அந்தப் பதிவில் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT