படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் நந்த் கிஷோர் சிங்

 
இந்தியா

டெல்லியில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் இன்ஸ்பெக்டர் படுகாயம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி காவல் துறையை சேர்ந்த இன்​ஸ்​பெக்​டர் நந்த் கிஷோர் சிங் நேற்று கூறிய​தாவது: “கடந்த புதன்​கிழமை இரவு அனு​மன் கோயில் அருகே காரை நிறுத்​தி​விட்டு ஜந்​தர் மந்தர் காவல் பணிக்​காக சீருடையில் சென்​றேன்.

அப்​போது நாடாளு​மன்ற சாலை சந்​திப்​பில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சியை சேர்ந்த சுமார் 5,000 பேர் குழு​மி​யிருந்​தனர். அவர்​களில் சுமார் 150 பேர் என்னை திடீரென தாக்​கத் தொடங்கினர். லத்​தி, கம்​பு​களால் அடித்​தனர். அவர்​களிடம் இருந்து மிகுந்த சிரமப்​பட்டு தப்​பினேன்.” இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்​குதல் தொடர்​பான வீடியோவை டெல்லி காவல் துறை சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு உள்​ளது. தலை​மைக் காவலர் பல்​ராம் கூறும்​போது, “கடந்த புதன்​கிழமை நாடாளுமன்ற சாலை​யில் சென்று கொண்​டிருந்​த​போது ஒருவர், என் முதுகில் கத்​தி​யால் குத்​தி​னார். அரு​கில் இருந்​தவர்​கள் என்னை மீட்டு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்” என்​றார்​.

SCROLL FOR NEXT