இந்தியா

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி எழுதிய கடிதம் வீடுவீடாக விநியோகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் பேர​வைத் தேர்​தல் நடைபெறவுள்ள நிலை​யில், பிரதமர் மோடி எழு​திய "ஜாய் மா காளி" கடிதம் வீடு​வீ​டாக விநி​யோகிக்​கப்​படு​கிறது.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, பிரதமர் நரேந்​திர மோடி பெங்​காலி மொழி​யில் எழு​தி​யுள்ள ‘ஜாய் மா காளி' (Joy Maa Kali) கடிதம் நேற்று முதல் வீடு வீடாக விநி​யோகிக்​கப்படு​கிறது. இதன் இந்தி மொழிப் பதிப்​பும் இணை​ய தளத்​தில் பகிரப்​பட்​டுள்​ளது.

          

காளி தேவி​யின் புகழுடன் தொடங்​கி​யுள்ள அந்​தக் கடிதத்​தில் பிரதமர் நரேந்திர மோடி கூறி​யிருப்​ப​தாவது: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்​றும் டாக்​டர் ஷியாமா பிர​சாத் முகர்ஜி போன்ற பல சிறந்த ஆளு​மை​களின் தாயக​மாக வங்​காளம் விளங்​கியது. ஆனால் தற்​போதைய சூழலில் வங்​காளத்​துக்கு ஒரு புதிய திசை தேவை.

மேற்கு வங்க மாநிலம் பின்​தங்​கிய நிலைக்கு சென்​றதற்கு ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ்​தான் காரணம். ‘சோ​னார் பங்​களா' (தங்க வங்​காளம்) மக்​கள் ஏமாற்​றப்​பட்​டுள்​ளனர். கடந்த 11 ஆண்டுகளில் விவ​சா​யிகள், இளைஞர்​கள், பெண்​கள் மற்​றும் ஏழை மக்​களுக்​கான திட்​டங்​களை முன்​னெடுத்​து, மாநிலத்​தின் ஒட்​டுமொத்த வளர்ச்​சிக்​குத் மத்​திய அரசு முன்​னுரிமை அளித்துள்​ளது. ஆனால், மாநில அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை. இருப்​பினும், மத்​திய அரசால் நிதி​ அளிக்கப்பட்ட ஜன் தன்யோஜ​னா, உஜ்​வாலா யோஜனா மற்​றும் ஆயுஷ்​ மான் பாரத் போன்ற திட்​டங்​கள் லட்​சக் கணக்​கான வங்க மக்​களைச் சென்​றடைந்​துள்​ளது.

வாக்கு வங்​கிக்​காக வங்​கதேசத்​தில் இருந்து சட்​ட​ விரோத​மாக ஊடுரு​வும் வெளி​நாட்​டினரை முதலமைச்​சர் மம்தா பானர்ஜி அரசு கண்டு கொள்​ளாமல் இருக்​கிறது. வங்​காளத்​தில் பாஜக ஆட்சிக்கு வந்​தால், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

மேலும் மத ரீதி​யான துன்​புறுத்​தல்​களால் வங்​க தேசம், பாகிஸ்தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தானில் இருந்து வெளி​யேறி வரும் முஸ்​லிம் அல்​லாத புலம்​பெயர்ந்​தோர் அனை​வருக்​கும் குடியுரிமை உறுதி செய்​யப்​படும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தேர்​தலுக்கு முன்​ன​தாக பொது​மக்​களுக்கு நேரடி​யாக விடுக்கப்பட்ட வேண்​டு​கோள் என்​ப​தால், இக்​கடிதம் அரசி​யல் ரீதியாக முக்​கி​யத்​து​வம்​ வாய்ந்​த​தாகக்​ கருதப்​படுகிறது.

SCROLL FOR NEXT