இந்தியா

2025-ல் இந்தியாவில் நடைபெற்ற மாற்றங்கள், சாதனைகளை பட்டியலிட்டு சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலை​தளத்​தில் பிரதமர் மோடி நேற்று விரி​வான பதிவு வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டின் வளர்ச்​சிக்​காக கடந்த 11 ஆண்​டு​களாக பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. நடப்பு 2025-ம் ஆண்​டில் மிகப்​பெரிய சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்​டன. இது, இந்​தி​யா​வின் ஆண்​டாக நினை​வு​ கூரப்​படும்.

குறிப்​பாக 2025-ம் ஆண்​டில் ஜிஎஸ்டி வரி விகிதத்​தில் மிகப்​பெரிய மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. 5% மற்​றும் 18% என்ற இரு விகிதங்​கள் மட்​டும் அமல் செய்​யப்​பட்டு உள்​ளன. இதனால் அனைத்து வீடு​களி​லும் பட்​ஜெட் சுமை குறைந்​திருக்​கிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள், விவ​சா​யிகள் நிறை​வான பலன்​களை அடைந்து வரு​கின்​றனர். பண்​டிகை காலங்​களில் அனைத்து பொருட்​களின் விற்​பனை​யும் கணிச​மாக அதி​கரித்​தது.

2025-ம் ஆண்​டில் தனி​நபர் வரு​மான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்​ச​மாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. வரு​மான வரிச் சட்​டம் 1961-க்கு பதிலாக வரு​மான வரிச் சட்​டம் 2025 நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் வரி நடை​முறை​யில் வெளிப்​படைத்​தன்மை உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது.

ரூ.100 கோடி வரை வரு​மானம் ஈட்​டும் நிறு​வனங்​கள், சிறு நிறு​வனங்​களாக வரையறுக்​கப்​பட்டு இருக்​கிறது. இந்​திய காப்​பீட்​டுத் துறை​யில் 100 சதவீத அந்​நிய முதலீட்​டுக்கு அனு​மதி வழங்​கப்​பட்டு உள்​ளது.

கடல்​சார் வணி​கம் தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் 5 முக்​கிய மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளன. இதன்​மூலம் கடல்​சார் வணி​கம் கணிச​மாக அதி​கரிக்​கும். காலத்​துக்கு பொருந்​தாத 71 பழைய சட்​டங்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன.

நாடு முழு​வதும் எளி​தாக வணி​கம் செய்​வதற்​கான சூழல் உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. இதன் காரண​மாக மின்​னணு, ஆட்டோ மொபைல் உட்பட பல்​வேறு துறை​களில் உள்​நாட்டு உற்​பத்தி அதி​கரித்​து, ஏற்​றும​தி​யும் கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது.

29 பழைய தொழிலா​ளர் சட்​டங்​கள் ஒன்​றிணைக்​கப்​பட்​டு, புதி​தாக 4 தொழிலா​ளர் சட்​டங்​கள் அமல் செய்​யப்​பட்டு உள்​ளன. இதன்​மூலம் பெண்​கள், அமைப்பு சாரா தொழிலா​ளர்​களின் நலன்​கள் பாது​காக்​கப்​பட்டு உள்​ளன. அதே​நேரம் தொழில் துறை​யின் வளர்ச்​சி​யும் உறுதி செய்​யப்​பட்​டிருக்​கிறது.

இந்​திய அணு சக்தி துறை​யில் தனி​யார் நிறு​வனங்​கள் பங்​கேற்க வகை செய்​யும் புதிய அணுசக்தி சட்​டம் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் இந்​திய அணு சக்தி துறை அபார வளர்ச்சி அடை​யும். ஹைட்​ரஜன் எரிசக்தி உற்​பத்​திக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

புதிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி சட்​டம் (ஜி ராம் ஜி) நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் ஊரக பகுதி மக்​களுக்​கான வேலை​வாய்ப்பு 100 நாட்​களில் இருந்து 125 நாட்​களாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது.

யுஜிசி, ஏஐசிடிஇ, என்​சிடிஇ உள்​ளிட்ட உயர் கல்வி அமைப்​பு​களை ஒன்​றிணைத்து இந்​திய உயர் கல்வி ஆணை​யம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் கல்​வித் துறை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் ஏற்​படும்.

மத்​திய அரசின் சீர்​திருத்​தங்​களால் சிறு வணி​கர்​கள், இளம் தொழில்​நுட்ப நிபுணர்​கள், விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள், நடுத்தர வர்க்க மக்​கள் என அனைத்து தரப்​பினரும் பலன் அடைந்து வரு​கின்​றனர். இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT