இந்தியா

“பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் புதிய உச்சம்” - ‘மனதின் குரலில்’ பிரதமர் பெருமிதம்

வேட்டையன்

புதுடெல்லி: பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா புதிய உயரத்தை எட்டியுள்ளதாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற தலைப்பில் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 136-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களே, இந்த மாதம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள், தொலைதூரம் செல்லக்கூடிய பினாகா ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த வெற்றி நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

அதேபோல குஷா என்​ற பெயரில்​ அ​திநவீன ஏவுகணை கவசத்தையும் டிஆர்டிஓ உருவாக்கியது.

உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது.

இன்று பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நட்பு நாடுகள் உடனான அரசியல் ரீதியான உறவு உள்ளிட்டவை புதிய உயரத்தை தேசம் எட்டியுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியா பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது பிரம்மோஸ் ஏவுகணை சார்ந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய பாதுகாப்பு உபகரணம் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT