இந்தியா

இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பலவிதமான பிரச்சினைகளில் சிக்கிய பயணிகள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: விமானிகள் பற்றாக்குறையால் நாட்​டின் மிகப்​பெரிய விமான நிறு​வனங்​களுள் ஒன்​றான இண்​டிகோ நிறு​வனம் கடந்த சில நாட்​களாக திட்​ட​மிட்​டபடி விமானங்​களை இயக்​கு​வ​தில் சிக்​கல்​களை எதிர்​கொண்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் தினமும் சராசரியாக 400-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில், நேற்​றும் கூட ஒரே நாளில் 400 இண்​டிகோ விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. இதையடுத்து இண்​டிகோ நிறுவன விமானங்​களில் பயணம் செய்​ய​விருந்த பயணி​கள் புலம்​பித் தவித்து வரு​கின்​றனர்.

சென்​னை, மும்​பை, டெல்​லி, கொல்​கத்​தா, அகம​தா​பாத், பெங்​களூரு உள்​ளிட்ட விமான நிலை​யங்​களில் பயணி​கள் நீண்ட வரிசை​யில் நிற்​ப​தைப் பார்க்க முடிந்​தது. அகம​தா​பாத் விமான​நிலை​யத்​தில் நேற்று அதி​காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை இண்​டிகோ நிறு​வனத்​தின் அனைத்து விமானங்​களும் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் அந்த விமானத்​தில் பயணம் செய்​ய​விருந்த பயணி​கள் அனை​வரும் புலம்​பித் தள்​ளினர். குறித்த நேரத்​தில் ஊருக்​குச் செல்ல முடி​யாத விரக்​தி​யும் அவர்​களிடத்​திலிருந்து வெளிப்​பட்​டது.

மஹரிஷி ஜானி என்ற பயணி கூறும்​போது, “இன்று காலை 6.15 மணிக்கு குவாஹாட்​டிக்கு செல்​ல​விருந்​தேன். இது கொல்​கத்தா வழி​யாக செல்​லும் கனெக்ட்​டிங் விமானம் ஆகும். ஸ்மார்ட் இண்​டியா ஹாக்​கத்​தான் நிகழ்ச்​சிக்​காக செல்​ல​விருந்​தேன். இதற்​காக சுமார் 74 ஆயிரம் திட்​டங்​களை நாங்​கள் சமர்ப்​பித்​திருந்​தோம். இதில் 1,400 திட்​டங்​கள் தேர்வு செய்​யப்​பட்​டன. எங்​களுக்கு நார்த்​-ஈஸ்​டர்ன் ஹில் பல்​கலைக்​கழகம் தேர்வு மைய​மாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இப்​போது எப்​படிச் செல்​வது என்று தெரிய​வில்​லை. எங்​களது 7 மாத கடின உழைப்பு வீணாகி​விட்​டது.

நாங்​கள் 6 பேர் கொண்ட குழு​வாக இந்த ஐடி​யாக்​களை தயார் செய்​திருந்​தோம். இப்​போது அனைத்து திட்​டங்​களும் முடிவுக்கு வந்​து​விட்​டது. வேறு விமானங்​களும் இல்​லை. ரயி​லில் சென்​றால் அந்த இடத்தை அடைய 3 நாட்​களாகும். எனவே, தற்​போது வீடு திரும்​பு​கிறோம். கடின உழைப்பு வீணாகி​விட்​டது. சில வாய்ப்​பு​கள் அரி​தாகத்​தான் கிடைக்​கும். நாங்​கள் முதல் முயற்​சி​யிலேயே தேர்வு செய்​யப்​பட்டு விட்​டோம். ஆனால், விமானம் ரத்​தான​தால் போக முடிய​வில்​லை’’ என்​றார்.

மற்​றொரு பயணி இக்​லாக் ஹுசைன் கூறும்​போது, “நான் ஜெட்​டா​விலிருந்து அகம​தா​பாத்​துக்கு வந்​து​விட்​டேன். இங்​கிருந்து எனது சொந்த ஊரான லக்​னோவுக்கு செல்ல வேண்​டும். ஆனால் கடந்த 2 நாட்​களாக இங்​கேயே சிக்கி இருக்​கிறேன். விமானங்​கள் இல்​லை. விமானச் சேவை நிறு​வனங்​கள் மீது பயணி​கள் கொந்​தளிப்​புடன் உள்​ளனர்’’ என்​றார்.

ஒடிசா​வின் புவனேஸ்​வரில் உளள பிஜு பட்​நாயக் சர்​வ​தேச வி​மான​நிலை​யம், பெங்​களூரு வி​மான​நிலை​யம் உள்​ளிட்ட வி​மான நிலை​யங்​களில்​ வி​மானங்​கள்​ ரத்​தான​தால்​ பயணி​கள்​ அவதிப்​பட்​டு நிற்​கும்​ நிலை​மை நேற்​றும்​ தொடர்​ந்​தது.

SCROLL FOR NEXT