அபேஷ் பானர்ஜி

 
இந்தியா

மருத்துவ மாணவி கொலையில் மம்தா மருமகனுக்கு தொடர்பு: தாய், தந்தை பகிரங்க குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்​கத்​தா​வில் உள்ள ஆர்ஜி கர் மருத்​து​வக் கல்​லூரி​யில் படித்த முது​நிலை மருத்​துவ மாணவி கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்டு கொடூர​மாகக் கொலை செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் காவல் துறை தன்​னார்​வலர் சஞ்​சய் ராய்க்கு கொல்​கத்தா விசா​ரணை நீதி​மன்​றம் ஆயுள் தண்​டனை விதித்து உள்​ளது. இந்நிலையில் புதிய முதல்​வர் சுவேந்து அதி​காரி, கொல்​கத்தா மருத்​துவ மாணவி வழக்கை மீண்​டும் விசா​ரிக்க உத்​தர​விட்டு உள்​ளார்.

உயி​ரிழந்த மருத்​துவ மாண​வி​யின் தாய் ரத்னா தேவ்​நாத் பானிஹாட்டி தொகுதி பாஜக எம்​எல்​ஏ​வாக உள்​ளார். அவர் முன்​னணி ஊடகத்​துக்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: எனது மகள் கொலை வழக்​கில் பானிஹாட்டி முன்​னாள் எம்​எல்ஏ நிர்​மல் கோஷ், பானிஹாட்டி நகராட்சி தலை​வர் சோம்​நாத் தேவ் ஆகியோர் விசா​ரணைக்கு ஆஜராக சம்​மன் அனுப்​பப்​பட்டு உள்​ளது.

இந்த வழக்​கில் முன்​னாள் முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் மரு​மகன் அபேஷ் பானர்​ஜிக்கு தொடர்பு உள்​ளது. பிரேதப் பரிசோதனை அறிக்​கை​யில், எனது மகள் நள்​ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிக்​குள் கொலை செயயப்​பட்டு இருக்​கலாம் என்று கூறப்​பட்டு உள்​ளது.

அந்த நேரத்​தில் மம்​தா​வின் மரு​மகன் அபேஷ் பானர்​ஜி​யின் செல்​போன் சிக்​னல் ஆர்ஜி கர் மருத்​து​வ​மனை​யில் பதி​வாகி இருக்​கிறது. எனவே அவரிட​மும் விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

மாண​வி​யின் தந்தை சேகர் ரஞ்​சன் தேவ்​நாத் கூறும்போது, ‘‘மம்​தா​வின் அண்​ணன் கார்த்​திக் பானர்​ஜி​யின் மகன் அபேஷ் பானர்​ஜி. இவர் மருத்​து​வர் ஆவார். எனது மகள் கொலை நடந்த இடத்​தில் அபேஷ் இருந்​துள்​ளார்.

அவரது உடலிலும் ஆடை​யிலும் ரத்​தக் கறை ஏற்​பட்டு உள்​ளது. குற்​றம் நடந்த இரவில் அப்​போதைய கொல்​கத்தா காவல் ஆணை​யர் வினீத் கோயலுடன் மம்தா மொபைல்​போனில் தொடர்​பில் இருந்​தார். அதன் பிறகு திட்​ட​மிட்டு பல்வேறு தடயங்​கள் அழிக்​கப்​பட்​டு உள்​ளன’’ என்றார்​.

SCROLL FOR NEXT