புதுடெல்லி: ஒடிசாவில் லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவின் சுந்தர்கரில் மகாநதி நிலக்கரி சுரங்க லிமிடெட் நிறுவனத்தில் சிபிஐ தரப்பில் அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டராக எஸ்.பி. சேத்தி பணியாற்றி வந்தார்.
சட்டவிரோதமாக நிலக்கரியை எடுத்துச் செல்ல அவர் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து சிபிஐ உயரதிகாரிகள் விசாரணை நடத்திலஞ்சம் வாங்கியதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது.
மேலும் லஞ்ச வழக்கில் தொடர்புடைய சிபிஐ அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் பிரசந்த குமார் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.