கோப்புப்படம்
புவனேஸ்வர்: ஒடிசாவின் நவரங்பூர், சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டங்களில் செயல்பட்டு வந்த 7 பெண்கள் உள்ளிட்ட 9 நக்சலைட்கள் சத்தீஸ்கரில் சரண் அடைந்துள்ளனர். இதையடுத்து நவரங்பூர் நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நவரங்பூர் மாவட்டத்தில் 2011 செப்டம்பர் 24-ம் தேதி பிஜு ஜனதா தள எம்எல்ஏ ஜகபந்து மாஜி, பாதுகாப்பு அதிகாரி பி.கே.பட்ரோ கொல்லப்பட்டடனர். அதன்பிறகு இந்த மாவட்டத்தில் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை.
ஒடிசாவின் 30 மாவட்டங்களில், இப்போது கந்தமால், கலஹண்டி, போலாங்கிர், மல்காங்கிரி, கோராபுட், ராயகடா, பவுத் ஆகிய 7 மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டுமே நக்சல் நடமாட்டம் உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.