இந்தியா

மத்திய பட்ஜெட்டில் ஏழை மக்களுக்காக எது​வுமே செய்யப்படவில்லை: கார்கே புகார்

செய்திப்பிரிவு

மத்​திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்​காக எது​வுமே செய்​யப்​பட​வில்லை என்று காங்​கிரஸ் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே விமர்​சனம் செய்துள்ளார். 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட்டை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நாடாளுமன்றத்​தில் நேற்று தாக்​கல் செய்​தார். இதுகுறித்து காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் கார்கே நேற்று கூறியதாதவது:

பிரதமர் மோடி மத்​திய அரசாங்​கத்​திடம் யோசனை​கள் தீர்ந்​து​விட்​டன. பட்​ஜெட் 2026 இந்​தி​யா​வின் பல பொருளாதார, சமூக மற்​றும் அரசி​யல் சவால்​களுக்கு ஒரு தீர்​வை​யும் வழங்​க​வில்​லை. ஏழை மக்​களுக்​காக பட்ஜெட்டில் எது​வுமே செய்​யப்​பட​வில்​லை.

          

“திட்​டச் செயல்​பாடு முறை” இப்​போது “சவாலான பாதை” ஆகி​விட்​டது. கொள்​கை​யில் தொலைநோக்கு பார்வை இல்லை, அரசி​யல் உறு​திப்​பாடு இல்​லை. நமக்கு அன்னமிடும் விவ​சா​யிகள் இன்​னும் அர்த்​த​முள்ள நலத்திட்ட ஆதரவு அல்​லது வரு​மான பாது​காப்பு திட்டத்துக்​காகக் காத்​திருக்​கின்​றனர். சமத்​து​வ​மின்மை பிரிட்​டிஷ் ஆட்​சி​யின் கீழ் காணப்​பட்ட நிலைகளை தாண்டி​விட்​டது, ஆனால் பட்​ஜெட் அதை பற்றி குறிப்​பிடக்​கூட இல்​லை.

பட்​டியல் சாதி, பழங்​குடி​யினர், இதர பிற்​படுத்​தப்​பட்​டோர், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய பிரி​வினர் மற்​றும் சிறு​பான்மை சமூகங்​களுக்கு எந்த ஆதர​வை​யும் இந்த பட்ஜெட் வழங்​க​வில்​லை. நிதி ஆணை​யத்​தின் பரிந்துரைகளை மேலும் ஆய்வு செய்ய வேண்​டும். ஆனால் கடுமை​யான நிதி நெருக்​கடி​யில் உள்ள மாநில அரசுகளுக்கு அவை எந்த நிவாரணத்​தை​யும் வழங்குவதாக தெரிய​வில்​லை. கூட்​டாட்​சித் தத்​து​வம் பலியாகிவிட்டது.

நமது இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு திறனுக்​காகவோ அல்​லது பணி​யிடங்​களில் பெண்​களின் பங்​கேற்பை அதிகரிப்​ப​தற்​காகவோ எந்த ஒரு தீவிர திட்​ட​மும் இல்​லை. ஏற்​றுமதி சரிவு, கட்டண அபா​யங்​கள், வர்த்தக பற்றாக்குறை, சுருங்கி வரும் உலகளா​விய பங்கு ஆகிய​வற்​றிற்கு எந்த பதி​லும் இல்​லை.

பணவீக்​கத்​திலிருந்து நிவாரணம் இல்​லை. சேமிப்பு குறைகிறது, கடன் அதி​கரிக்​கிறது, ஊதி​யம் தேக்கமடைந்துள்​ளது. அந்​நிய நேரடி முதலீடு மற்​றும் ஊதிய தேக்​கம் ஆகியவை புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன. வாக்​குறு​தி​கள் மீண்​டும் மீண்​டும் வழங்​கப்​படு​கின்​றன. ஆனால், செயல்​பாடு இல்​லை. இவ்​வாறு அவர் தெரிவித்துள்​ளார்.

SCROLL FOR NEXT